27 1
உலகம்செய்திகள்

போருக்குத் தயாராகிறதா ஜேர்மனி? போர்வீரர்களாகும் பொதுமக்கள்

Share

போருக்குத் தயாராகிறதா ஜேர்மனி? போர்வீரர்களாகும் பொதுமக்கள்

ஜேர்மனி, 1949இல் கிழக்கு, மேற்கு என இரண்டாக பிரிந்தபோது, அதனிடம் போதுமான ராணுவ வீரர்கள் இருந்தார்கள்.

ஆனால், 1990இல் கிழக்கும் மேற்கும் இணைந்து ஒரே ஜேர்மனியானபின், ராணுவத்தின் தேவை பெரிய அளவில் இல்லை என கருதப்பட்டதால் ராணுவத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை.

2000இல், ஜேர்மன் ராணுவம் 40 சதவிகித ராணுவ வீரர்களைக் குறைத்துவிட்டது.

ஆனால், இப்போது நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. ஜேர்மன் ராணுவம் மீண்டும் ஆட்களை சேர்க்கத் துவங்கியுள்ளது.

திரைப்படங்களில் விளம்பரம், விளம்பர போர்டுகள், அவ்வப்போது இளைஞர்களை ஈர்க்கும் வகையில் முகாம்கள் என மக்களை ராணுவத்தின்பால் ஈர்க்கத் துவங்கியுள்ளது ஜேர்மனி.

விளைவு, இன்று ஜேர்மன் ராணுவத்தில் 179,000 ராணுவ வீரர்கள் இருக்கிறார்கள். நேட்டோ அமைப்பின் ஆறாவது பெரிய ராணுவம் என்னும் பெருமையை எட்டியும், ஜேர்மனி திருப்தியடையவில்லை. 2031இல் 203,000 ராணுவ வீரர்கள் என்னும் இலக்கை நியமித்துள்ளது.

ஆக, நேற்று வரை அலுவலகங்களில் பணியாற்றி வந்த பொதுமக்கள் பலர், இன்று ராணுவத்தில் ஆயுதப் பயிற்சி எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

அதற்கு ஒரே காரணம், உக்ரைனை ரஷ்யா ஊடுருவியதுதான். ரஷ்யா உக்ரைன் போரைப்பார்த்து, திடீரென போர் என்னும் நிலை உருவானால், அதை எதிர்கொள்ளத் தயாராக இருக்கவேண்டும் என்னும் எணம் ஜேர்மனிக்கு வந்துவிட்டது.

ஆக, போர் வந்தால் அதை எதிர்கொள்ள ஜேர்மனி தயாராகிக்கொண்டிருக்கிறது என்றே கூறலாம்.

 

Share

Recent Posts

தொடர்புடையது
MediaFile 4 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இன்று மகா சிவராத்திரி! – சிவாலயங்களில் குவியும் பக்தர்கள்; இரவு முழுவதும் விழித்திருந்து வழிபாடு!

ஆன்மீக ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் மிக முக்கியமான தினமாகக் கருதப்படும் மகா சிவராத்திரி விரதம் இன்று...

MediaFile 4 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அக்குரேகொட படுகொலை: கொலையாளிகளின் கார் மீட்பு! – சட்டத்தரணியின் ‘தரப்பு மாற்றம்’ மரணத்திற்கு காரணமா?

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியைப் படுகொலை செய்யப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் கார், காலி...

image 1d03fce287
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உங்கள் கையெழுத்து உங்கள் உரிமையைக் காக்கும்’: PTA-வை நீக்கக் கோரி வடகிழக்கில் ஒரு லட்சம் கையெழுத்துப் போராட்டம்!

சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடைச்சட்டம் (PTA) மற்றும் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட முன்மொழிவுகளை (ATA) முற்றாக...

image 914163dc5e
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பு ஜிந்துபிட்டியில் பயங்கரம்: சிகையலங்கார நிலையத்திற்குள் புகுந்து துப்பாக்கிச் சூடு! 

கொழும்பு, ஜிந்துபிட்டி வரக்கா சந்தி பகுதியிலுள்ள முடியலங்கார நிலையம் (Barber Shop) ஒன்றிற்குள் நேற்றிரவு (14)...