19 11
உலகம்செய்திகள்

ஜேர்மனியில் மீண்டும் ஒரு இரண்டாம் உலகப்போர்க்கால வெடிகுண்டு கண்டுபிடிப்பு

Share

ஜேர்மன் நகரமொன்றில், மீண்டும் ஒரு இரண்டாம் உலகப்போர்க்கால வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஜேர்மனியின் Saxony மாகாணத்திலுள்ள Dresden நகரில், பாலம் ஒன்றின் கட்டுமானப்பணி நடந்துவரும் நிலையில், நேற்று காலை வெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.

அது, இரண்டாம் உலகப்போரின்போது பிரித்தானியா வீசிய குண்டுகளில் ஒன்று ஆகும்.

அந்த நகரில் வாழும் மக்களில் கிட்டத்தட்ட பாதிபேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளதால், சுமார் 10,000 பேரின் வேலைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஜேர்மன் நகரங்கள் பலவற்றில், இரண்டாம் உலகப்போரின்போது வீசப்பட்ட குண்டுகள் கட்டுமானப்பணியின்போது தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட்டுவருகின்றன.

Dresden நகரில் 1945ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சுமார் 4,000குண்டுகள் வீசப்பட்டன. அந்த தாக்குதலில் 25,000 பேர் கொல்லப்பட்டனர்.

அப்போது வீசப்பட்ட குண்டுகளில், வெடிக்காத பல குண்டுகள் அவ்வப்போது கண்டுபிடிக்கப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...