25 12
உலகம்செய்திகள்

ஜெர்மனியை உலுக்கிய விபத்து: கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் மக்களுக்கு நேர்ந்த துயரம்

Share

ஜெர்மனியை உலுக்கிய விபத்து: கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் மக்களுக்கு நேர்ந்த துயரம்

Germany Christmas Market Accident

ஜெர்மனியில் ஒரு கிறிஸ்துமஸ் சந்தையில் மக்கள் கூட்டத்தின் மீது கார் மோதியதில் ஏராளமானவர்கள் காயமடைந்துள்ளதாகவும் பலர் உயிரிழந்திருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சரியாக தெரியவரவில்லை, எனினும் 50 முதல் 70 பேர் வரை காயமடைந்திருக்கலாம் என்று அவசர சேவைகளை மேற்கோள் காட்டி ஜெர்மன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்போது, கிறிஸ்துமஸ் சந்தையில் இருந்த மக்கள் கூட்டத்தின் ஊடாக அதிவேகமாக கறுப்பு நிற BMW கார் ஒன்று டவுன் ஹால் திசையை நோக்கிச் சென்றுள்ளது.

அதனை தொடர்ந்து, விரைந்து செயற்பட்ட அதிகாரிகள் அந்த பயங்கர விபத்தை ஏற்படுத்திய காரின் சாரதியை கைது செய்துள்ளனர்.

கிழக்கு ஜெர்மனிய நகரமான Magdeburg இல் நடைபெற்ற இந்த சம்பவமானது, ஒரு பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

மேலும், குறித்த சந்தேகநபர் ஒரு சவுதி குடிமகன் என்று அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், தாக்குதல் இடம்பெறுவதற்கு சிறிது நேரத்திற்கு முன்னர் காரை வாடகைக்கு எடுத்துள்ளதாகவும் பாதுகாப்பு வட்டாரத்தை மேற்கோள் காட்டி தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share
தொடர்புடையது
26 6990101d03ddb
செய்திகள்அரசியல்இலங்கை

அரகலய நிதிப் பின்னணி: ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை கோரும் நாமல் ராஜபக்ஷ!

இலங்கையில் 2022-ஆம் ஆண்டு இடம்பெற்ற ‘அரகலய’ போராட்டம் தொடர்பாகவும், அதற்கு வெளிநாடுகளில் இருந்து கிடைத்ததாகக் கூறப்படும்...

dailythanthi 2026 02 14 giawqio6 pul
செய்திகள்இந்தியா

புல்வாமா வீரர்களுக்கு 7-ம் ஆண்டு வீரவணக்கம்: நாடு முழுவதும் கருப்பு தினம் அனுசரிப்பு!

கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் திகதி, ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் சென்ற...

1763708534 drug 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போதைப்பொருள் கும்பலுக்கு மரண அடி! – ஒரே நாளில் 820 பேர் கைது.

இலங்கை அரசாங்கம் மற்றும் காவல்துறை இணைந்து முன்னெடுத்து வரும் ‘நேஷன் யுனைடெட் – நேஷனல் டிரைவ்’...

images 14
செய்திகள்அரசியல்இலங்கை

நுரைச்சோலையில் பாரிய நிலக்கரி ஊழல்? – 5 கப்பல்களும் தரமற்றவை என சஜித் பிரேமதாச அதிரடி குற்றச்சாட்டு!

நுரைச்சோலையில் அமைந்துள்ள லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்காக அண்மையில் இறக்குமதி செய்யப்பட்ட ஐந்து நிலக்கரி...