உலகம்செய்திகள்

சிரியாவில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழிகளில் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுப்பு!

Share

சிரியாவில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழிகளில் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுப்பு!

சிரிய (Syria) தலைநகர் டமாஸ்கஸின் வடமேற்கு புறநகர்ப் பகுதியான அட்ராவில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழிகளில் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

வயிட் ஹெல்மெட்ஸ் என்ற மனிதாபிமான அமைப்பின் மீட்புக் குழுவினர் குறித்த மனிதப் புதைகுழிகளைத் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த சில நாட்களாக, பஷர் அல்-அசாத்தின் ஆட்சியில் சிரியாவின் சிறைகளில் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுக் கொன்று புதைக்கப்பட்டவர்களின் புதைகுழிகள் பற்றிய காணொளிகள் இணையத்தில் வெளியிடப்பட்டன.

இதனடிப்படையில் அட்ராவில், வெள்ளை ஹெல்மெட்ஸ் அமைப்பு முன்னெடுத்த தேடுதலில் பல பெரிய வெள்ளை பிளாஸ்டிக் பைகளில் உடல்களின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

ஏழு மனித உடல்களின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அவை மரபணு ஆய்வுக்காக தனித்தனியாக வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயிரக்கணக்கான மக்கள் காணாமல் போயுள்ளதாகவும் அவர்களுக்கு என்ன நடந்தது என்பது பற்றிய உண்மையைக் கண்டறிவதற்கு சில கால அவகாசம் தேவை எனவும் வயிட் ஹெல்மட்ஸ் மனிதாபிமான அமைப்பு தெரிவிக்கிறது.

Share
தொடர்புடையது
22 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்திலிருந்து காணாமல் போன இரு மீனவர்கள் தமிழ்நாடு கடலோரப் பகுதியில் மீட்பு!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை ஊரணி கடற்பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன இரண்டு...

21 4
செய்திகள்அரசியல்இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே மூன்றாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பிரதானியும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே, உயிர்த்த...

20 3
செய்திகள்உலகம்

அஸர்பைஜான் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான நிலையம் மற்றும் பாடசாலை இலக்கு!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் அண்டை நாடுகளுக்கும் பரவி வரும் நிலையில், அஸர்பைஜானின் கட்டுப்பாட்டில்...

19 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போலி உறுதிப்பத்திரம் தயாரித்த பெண் சட்டத்தரணிக்கு 12 ஆண்டு சிறை: கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கொழும்பு பொரளைப் பகுதியில் உள்ள பெறுமதியான காணியொன்றுக்குப் போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பெண்...