7 9
உலகம்செய்திகள்

ஒரே பள்ளியில் படிக்கும் 120 இரட்டையர்கள்.., ஆசிரியர்களுக்கு சவாலை ஏற்படுத்தியுள்ள மாணவர்கள்

Share

ஒரே பள்ளியில் படிக்கும் 120 இரட்டையர்கள்.., ஆசிரியர்களுக்கு சவாலை ஏற்படுத்தியுள்ள மாணவர்கள்

ஒரு பள்ளியில் மொத்தம் 120 இரட்டையர்கள் படித்து வருவதால் ஆசிரியர்களுக்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய மாநிலமான பஞ்சாப், ஜலந்தர் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் 60 இரட்டை குழந்தைகள் என்று மொத்தமாக 120 இரட்டையர் மாணவர்கள் படித்து வருகின்றனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இரட்டையர்களின் எண்ணிக்கை 47 ஆக இருந்த நிலையில் தற்போது உயர்ந்துள்ளது.

இதுகுறித்து பள்ளியின் முதல்வர் ரஷ்மி விஜ் கூறுகையில், “எங்களுடைய பள்ளியில் மொத்தம் 120 இரட்டையர் மாணவர்கள் படித்து வருகின்றனர். நாங்கள் இரட்டையர் மாணவர்களை இங்கு வந்து சேருங்கள் என்று கேட்கவில்லை. இது எங்களுக்கே ஆச்சரியமான தகவல் தான்.

அதேபோல் அவர்களுக்கு நாங்கள் சலுகைகளை வழங்கவில்லை. அணைத்து மாணவர்களுக்கும் பொதுவான கட்டணம் தான்” என்றார்.

இந்த பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவர் பேசுகையில், “எங்களிடம் படிக்கும் பல இரட்டையர்களில் ஒரு பிள்ளைக்கு மட்டும் ஸ்பெஷல் கவனிப்பைப் பெற்றோர் தருவதாகப் புகார் அளிப்பார்கள். ஆனால், நாங்கள் அவர்களை தனி தனி வகுப்புகளில் படிக்க வைத்துள்ளோம்” என்றார்.

மேலும், இந்த மாணவர்களை அடையாளம் காண்பதற்கு ஆசிரியர்களுக்கு மிகப்பெரும் சவாலாக இருக்கிறது. அதேபோல, மாணவர்களிடத்திலும் இந்த குழப்பம் இருப்பதாக கூறுகின்றனர்.

யார் என்று அடையாளம் காண முடியாமல் பெயர்களை மாற்றி மாற்றி ஆசிரியர்கள் அழைக்கின்றனர். இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காகவே ஒரு சிறப்புத் திட்டத்தை பள்ளி அமல்படுத்தி இருக்கிறது.

அதாவது, இரட்டையர்களை ஒரே வகுப்பறையில் படிக்க அனுமதிக்காமல் தனித் தனிப் பிரிவில் போட்டுவிடுகிறார்கள். இதனால், ஓரளவிற்கு குழப்பத்தை கட்டுப்படுத்த முடிகிறது என்கிறார்கள்.

Share
தொடர்புடையது
world 63
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாடு முழுவதும் 28,000-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை: 763 பேர் கைது எனப் பொலிஸார் அறிவிப்பு!

குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் நேற்று (09) முன்னெடுக்கப்பட்ட...

world 62
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்டாவில் 10 மில்லியன் ரூபாய் பெறுமதியான தரமற்ற அழகுசாதனப் பொருட்கள் பறிமுதல்!

கொழும்பு, பெட்டா பகுதியில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டு, எவ்வித லேபிள்களும் இன்றி வைக்கப்பட்டிருந்த சுமார் 10...

world 61
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சர்ச்சைக்குரிய மருத்துவ நியமன நடைமுறை: மே 8 ஆம் திகதி நீதிமன்றம் உத்தரவு!

சர்ச்சைக்குரிய உள்ளகப் பயிற்சிக்குப் பிந்தைய மருத்துவ நியமன நடைமுறைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை விசாரணைக்கு...

world 60
செய்திகள்இலங்கை

புத்தாண்டு தினங்களில் நாடு முழுவதும் மதுபான விற்பனை நிலையங்கள் மூடல்.

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் ஏப்ரல் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில்...