உலகம்செய்திகள்

இயற்கை பேரழிவில் சிக்கிய ஸ்பெயின்: அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

Share
13 27
Share

இயற்கை பேரழிவில் சிக்கிய ஸ்பெயின்: அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

கிழக்கு ஸ்பெயினில் ஏற்பட்ட மிக மோசமான திடீர் வெள்ளத்தினால் இதுவரை 72 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த செவ்வாயன்று பெய்த கடும் மழை காரணமாக வீதிகள் மற்றும் நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இதன் விளைவாக வீதியிர் நிறுத்திவைக்கப்பட்ட வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.

குறித்த வெள்ளத்தில் ஒரு தொடருந்து தடம் புரண்டதுடன், வீடுகள் மற்றும் கட்டிடங்கள் சேதமடைந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மோசமான பாதிப்புக்குள்ளான பகுதிகளில் உள்ள மக்கள் வீட்டிலேயே இருக்கவும், அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்கவும் ஸ்பெயின் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

வெள்ளப் பெருக்கில் சிக்கிய மக்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருவதால் உயிரிழப்பு எண்ணிக்கையை சரியாக தெரிவிக்க முடியாது என ஸ்பெயினின் வலென்சியா பிராந்தியத்தின் தலைவர் கார்லோஸ் மசோன் தெரிவித்துள்ளார்.

வலென்சியா பிராந்தியத்தில் உள்ள சிச்வா பகுதியில் செவ்வாய்கிழமை எட்டு மணித்தியாலங்களில் 491 மில்லி மீற்றர் மழை பதிவாகியுள்ளது.

இது ஸ்பெயினில் ஒரு வருடத்தில் பெய்யும் மழைக்கு சமனானது என அந்நாட்டு வானிலை நிலையம் தெரிவித்துள்ளது.

வெள்ளத்தால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள லெட்டூர் நகராட்சியில் காணாமல் போனவர்களைத் தேடுவதற்கு அவசர சேவைப் பணியாளர்கள் ட்ரோன்களைப் பயன்படுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது.

Share
Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...