10 29
இலங்கைஉலகம்செய்திகள்

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் நியமனத்தில் உருவாகியுள்ள சிக்கல்

Share

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் நியமனத்தில் உருவாகியுள்ள சிக்கல்

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் புதிய தலைவர் நியமனம் தொடர்பான தீர்மானத்தில், பிரதமர் ஹரினி அமரசூரியவிற்கும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்கும் இடையில் தெளிவான வேறுபாடு காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

பிரதமர் ஹரினி அமரசூரியவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர், மானியங்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்கவை தொடர்ந்தும் அந்த பதவியில் தொடர்வதற்கு தீர்மானிக்கப்பட்டதாக முன்னதாக பிரதமர் அலுவலகத் தகவல்கள் தெரிவித்திருந்தன.

 

எவ்வாறாயினும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ்மட்ட தொழிற்சங்கங்கள், இந்த நியமனத்தை எதிர்த்ததாக கூறப்படுகிறது.

 

இந்தநிலையில் திடீர் திருப்பமாக, முன்னாள் தலைவர் உடனடியாக இராஜினாமா செய்வதாக ஜனாதிபதி அலுவலகம் அறிவித்தது,

 

இருப்பினும் அவர் நீக்கப்பட்டதற்கான காரணங்கள் தெளிவாக வெளியிடப்படவில்லை.

 

இது தொடர்பில், அமைச்சர் விஜித ஹேரத் இன்னும் விளக்கமளிக்கவில்லை.

 

இருப்பினும் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க பதவி விலகியதை அடுத்து, சிரேஷ்ட பேராசிரியர் கபில செனவிரத்ன பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 21 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஏப்ரல் முதல் வாகனங்களுக்குப் புதிய வரி! – அவசரப்பட்டு வாகனங்களை வாங்க வேண்டாம் என இறக்குமதியாளர்கள் சங்கம் கோரிக்கை!

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு எதிர்வரும் ஏப்ரல் 1, 2026 முதல் 2.5 சதவீத சமூக...

image 1200x800 20 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வைத்தியர் சத்தியமூர்த்தி அதிரடி முறைப்பாடு! – மக்கள் எழுச்சி கட்சி நிறுவனருக்கு எதிராகப் பொலிஸார் விசாரணை!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி அவர்கள், அகில இலங்கை மக்கள் எழுச்சி...

image 1200x800 19 2
செய்திகள்இந்தியா

இஸ்ரேல் செல்லும் பிரதமர் மோடி! – 56 இராணுவ நிறுவனங்களுக்கு இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தங்கள் கையெழுத்து!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரும் பிப்ரவரி 25-ஆம் திகதி இஸ்ரேலுக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ...

001
செய்திகள்அரசியல்இலங்கை

சிஐடி-யில் ஆஜராகிறார் பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க! – நிதி துஷ்பிரயோக வழக்கில் பரபரப்பு விசாரணை!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நிதி முறைகேடு தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, அவரது...