7 35
உலகம்செய்திகள்

கனடாவில் உள்ள சர்வதேச மாணவர்கள் தொடர்பில் வெளியான தகவல்

Share

கனடாவில் உள்ள சர்வதேச மாணவர்கள் தொடர்பில் வெளியான தகவல்

கனடாவிலுள்ள (Canada) பிராம்ப்டன் நகரில் சர்வதேச மாணவர்கள் உடல் ரீதியான வன்முறைக்கும் மனிதக் கடத்தலுக்கும் உட்படுத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

இது தொடர்பில், பிராம்ப்டன் நகரின் மேயர் பாட்ரிக் பிரவுன் செய்தியாளர் சந்திப்பு ஒன்றின் போது குறிப்பிட்டுள்ளார்.

 

குறித்த குற்றச்செயல்கள் அன்றாட வாழ்க்கையில் அனைவருக்கும் தெரியப்படுமாறு நடக்கின்றன என்று அவர் கூறியுள்ளார்.

 

எனவே, இந்த பிரச்சினைகளுக்கு தீர்வுகாண விரைவில் நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

 

பிராம்ப்டன் நகரில், குறிப்பாக இளம்பெண் மாணவர்கள், வாடகை வீடுகளில் வசிப்பவர்களே குறித்த வன்முறை நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவதாக தெரவிக்கப்பட்டுள்ளது.

 

இது தொடர்பில் பல முறைகள் மாணவர்களால் முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ள போதும் அரசு அதிகாரிகளால் இந்த விடயயம் அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொள்ளப்படுவது இதுவே முதன்முறை எனவும் கூறப்பட்டுள்ளது.

 

இந்நிலையில், பிராம்ப்டன் நகரிலுள்ள சர்வதேச மாணவர்கள் புலமைபரிசில்கள் மற்றும் குறைந்தளவு செலவிலான வசதிகள் மூலமாகவே இவ்வாறான நடவடிக்கைகளுக்கு உள்வாங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
Harini 1200x675px 26 03 25 1000x600 1
செய்திகள்இலங்கை

பல்கலைக்கழகப் பேராசிரியர் மீதான பாலியல் துன்புறுத்தல் புகார்: முறையான விசாரணை நடக்கிறது – பிரதமர் ஹரிணி அமரசூரிய!

வயம்பப் பல்கலைக்கழகத்தில் (Wayamba University) பேராசிரியர் ஒருவர் தனது விடுதியில் மாணவி ஒருவரை வலுக்கட்டாயமாகத் தடுத்து...

25 690903a432341
செய்திகள்இந்தியா

ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: மங்கோலியாவில் அவசரமாகத் தரையிறங்கியது! 

சான் பிரான்சிஸ்கோவிலிருந்து டெல்லி நோக்கிப் பயணித்த ஏர் இந்தியா (Air India) விமானம் ஒன்று, தொழில்நுட்பக்...

25 69090d80f023d
செய்திகள்உலகம்

தென்சீனக் கடல் பதற்றம்: சீனாவுக்கு எதிராக கனடா, பிலிப்பைன்ஸ் இடையே முக்கியப் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

தென்சீனக் கடலில் சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் நோக்கில், கனடாவும் பிலிப்பைன்ஸும் ஒரு முக்கியமான பாதுகாப்பு...

25 6909005a2a5b7
செய்திகள்உலகம்

பிணைக்கைதிகள் உடல்கள் ஒப்படைப்பைத் தொடர்ந்து: 45 பலஸ்தீனர்களின் உடல்களை இஸ்ரேல் விடுவித்தது! 

ஹமாஸிடமிருந்து மூன்று இஸ்ரேலியப் பிணைக்கைதிகளின் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல் 45 பலஸ்தீனர்களின் உடல்களை ஒப்படைத்துள்ளதாக...