4 1
உலகம்செய்திகள்

மத்திய கிழக்கில் அதிகரிக்கும் போர் பதற்றம் – லெபனானில் தரை வழி தாக்குதலை தொடங்கும் இஸ்ரேல்

Share

மத்திய கிழக்கில் அதிகரிக்கும் போர் பதற்றம் – லெபனானில் தரை வழி தாக்குதலை தொடங்கும் இஸ்ரேல்

இஸ்ரேல் (Israel) எல்லைக்கு அருகில் உள்ள லெபனானில் (Lebanon) ஹிஸ்புல்லா (Hezbollah) உள்கட்டமைப்பைக் குறி வைத்து தரை வழி தாக்குதலை மேற்கொள்வதாக இஸ்ரேல் அமெரிக்காவிடம் தெரிவித்துள்ளதாக அந்நாட்டின் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

இத்தனை நாட்கள் வான்வழித் தாக்குதலை மட்டுமே நடத்தி வந்த இஸ்ரேல் இப்போது தரை வழி தாக்குதலைத் தொடங்குவது மத்திய கிழக்கில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

மத்திய கிழக்கில் கடந்த சில காலமாகவே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. காசாவில் (Gaza) உள்ள ஹமாஸ் மீதான தாக்குதலை இஸ்ரேல் பல மாதங்களாக தொடர்ந்து வருகிறது.

லெபனானில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பு மீது இஸ்ரேல் தாக்குதலை நடத்தியது. இதற்கு இஸ்ரேல் பதில் தாக்குதல் நடாத்திய போது ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார்.

அடுத்த கட்டமாக லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா உள்கட்டமைப்பைக் குறிவைத்து இஸ்ரேல் தரை வழி தாக்குதலை மேற்கொள்ள இருப்பதாகவும் இதை இஸ்ரேல் தரப்பே தங்களிடம் தெரிவித்ததாகவும் அமெரிக்க வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.

இத்தனை நாட்கள் வான்வழித் தாக்குதலை மட்டுமே இஸ்ரேல் நடத்தி வந்த நிலையில், தரை வழித் தாக்குதலை இஸ்ரேல் தொடங்குவது மத்திய கிழக்கில் போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் அமெரிக்காவின் (United States) வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் கூறுகையில், “எல்லைக்கு அருகில் உள்ள ஹிஸ்புல்லா உள்கட்டமைப்பை இலக்காகக் கொண்ட தாக்குதலை நடத்துவதாக அவர்கள் எங்களுக்குத் தெரிவித்தனர்.

அவை சிறியளவிலான தரை வழி தாக்குதலாக இருக்கும் என்பதே எங்கள் புரிதல் என குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேல் இதுபோல பல திசைகளில் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியிருக்கும் நிலையில், நேரடியாக ஈரான் இதில் தலையிட வேண்டும் என்ற குரல்களும் ஈரானில் எழுந்துள்ளது.

இதுவரை இதில் ஈரான் நேரடியாகத் தலையிடாத நிலையில், அவர்கள் உள்ளே வந்தால் இது மிகப் பெரிய போராக மாறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
15 6
உலகம்செய்திகள்

அமெரிக்க உளவுத்தகவல் கசிவு! விசாரணைக்கு தயாராகும் ட்ம்பின் ஆதரவாளர்

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத்துறையின் முதற்கட்ட மதிப்பீட்டில் வெிளியடப்பட்டமைக்கு மத்திய...

16 6
இந்தியாசெய்திகள்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார். மனிதர்களை...

14 6
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலின் ஜனநாயக விரோத செயற்பாடு: விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் முறையற்ற செயற்பாட்டை கண்டிக்கும் தற்றுணிவு அரசாங்கத்துக்கு கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்...

12 9
இலங்கைசெய்திகள்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு!

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள...