24 66f8ce3f915ac 5
உலகம்

வெளிநாடொன்றில் சுற்றுலா சென்ற பாடசாலை மாணவர்களுக்கு நேர்ந்த கதி

Share

வெளிநாடொன்றில் சுற்றுலா சென்ற பாடசாலை மாணவர்களுக்கு நேர்ந்த கதி

தாய்லாந்தில்(Thailand) சுற்றுலா சென்ற பாடசாலை பேருந்து ஒன்று தீப்பற்றி எரிந்ததில் 25 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த விபத்துச் சம்பவம் தாய்லாந்தின் தலைநகரை அண்மித்த பகுதியில் இன்று (01.10.2024) இடம்பெற்றுள்ளது.

குறித்த பேருந்தானது பாடசாலை சுற்றுலாவிற்காக மத்திய உதாய் தானி மாகாணத்தில் இருந்து அயுதயா மற்றும் நொந்தபுரி மாகாணங்களுக்கு பயணித்த நிலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், விபத்துக்குள்ளான பேருந்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் என 44 பேர் வரை பயணித்ததாக குறிப்பிடப்படுகின்றது.

இந்நிலையில், பேருந்தில் பயணித்த 44 பேரில் தற்போது வரை 25 பேர் வரை உயிரிழந்துள்ளதாகவும் பேருந்தின் சாரதி உயிர் பிழைத்ததுடன் தப்பி ஓடியதாகவும் கூறப்படுகின்றது.

Share
தொடர்புடையது
10 4
உலகம்செய்திகள்

ஈரான் மீதான கூட்டுத் தாக்குதல்: பதற்றத்தைக் குறைக்க இந்தியா வலியுறுத்தல்!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து ஈரானில் உள்ள ராணுவத் தளங்கள் மீது தாக்குதல்களை நடத்தியுள்ள...

08 4
செய்திகள்உலகம்

பஹ்ரைனில் ஈரானின் தாக்குதல் அச்சுறுத்தல்: அமெரிக்கத் தூதரகம் குடிமக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!

ஈரானிலிருந்து பஹ்ரைன் மீது ஏவுகணை அல்லது ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ள நிலையில்,...

Untitled 1
உலகம்செய்திகள்

மத்திய கிழக்கு பதற்றம்: ஜோர்தான் வான்பரப்பில் ஏவுகணைகள் இடைமறிப்பு

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே தீவிரமடைந்துள்ள வான்வழித் தாக்குதல்களுக்கு மத்தியில், ஜோர்தான் வான்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த...

ap26059256811672
செய்திகள்உலகம்

ஈரான் மீது அமெரிக்கா – இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல்: பிரம்மாண்டமான நடவடிக்கை என டிரம்ப் அறிவிப்பு!

ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மற்றும் ஏவுகணை தளங்களை இலக்கு வைத்து, அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் படைகள்...