கனடாவில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய விதி
கனடாவில் சர்வதேச மாணவர்களுக்கான வேலை நேரத்தை வாரத்திற்கு 24 மணிநேரமாக நிர்ணயிக்கும் புதிய விதி அறிமுகப்படுத்தபடவுள்ளது.
இந்த விதியானது இந்த ஆண்டு இறுதியில் நடைமுறைப்படுத்தபடவுள்ளது என கனடாவின் குடிவரவு, அகதிகள் மற்றும் கனடா குடியுரிமை அமைப்பு (IRCC) அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) கணக்கில் பதிவிட்டுள்ளது.
அதாவது இப்போது உள்ள 20 மணி நேர வேலை வரம்பு 24 மணி நேரமாக உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் தகுதியுள்ள முழுநேர மாணவர்கள் வகுப்பு இருக்கும் போது வாரத்திற்கு 20 மணிநேரம் வேலை செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இது சர்வதேச மாணவர்களுக்கு தங்கள் கல்வியையும் வேலை வாய்ப்புகளையும் சமநிலைப்படுத்தும் சுதந்திரத்தை வழங்கும் எதிர்பார்க்கப்படுகிறது.