23
உலகம்செய்திகள்

ஜேர்மனிய மாகாணமொன்றில் நெருங்கும் தேர்தல் : அரசியல்வாதி மீது நிறப்பூச்சு வீச்சு

Share

ஜேர்மனிய மாகாணமொன்றில் நெருங்கும் தேர்தல் : அரசியல்வாதி மீது நிறப்பூச்சு வீச்சு

ஜேர்மன் மாகாணமொன்றில் இந்த வார இறுதியில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரபல ஜேர்மன் அரசியல்வாதி ஒருவர் மீது நிறப்பூச்சு ( Paint)வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜேர்மனியின் Thuringia மாகாணத்தில், kingmaker கட்சி என அறியப்படும் Sahra Wagenknecht Alliance (BSW) கட்சியின் தலைவர்களில் ஒருவரான Sahra Wagenknecht மீது நிறப்பூச்சு வீசப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் திடீரென தன் மீது நிறப்பூச்சு வீசப்பட்டதால் அவர் சற்று அதிர்ச்சியடைந்தாலும், மீண்டும் தன் ஆதரவாளர்களிடையே உரையாற்றியுள்ளார்.

இதனையடுத்து நிறப்பூச்சு வீசிய நபரை பொலிஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

BSW கட்சி, தேர்தலில் மூன்றாம் இடத்தைப் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், ஆட்சி அமைப்பதில் அக்கட்சி முக்கியப் பங்கு வகிக்கும் என்பதால் அக்கட்சி kingmaker கட்சி என அழைக்கப்படுகிறது.

உக்ரைன் ஊடுருவல் தொடர்பில் புடினுடன் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என Sahra தெரிவித்த கருத்து சர்ச்சையை உருவாக்கியிருந்தது.

மேலும், எதனால் Sahra மீது நிறப்பூச்சு வீசப்பட்டது என்பது மர்மமாகவே நீடித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...