6 46
உலகம்செய்திகள்

கனடாவிலிருந்து 70,000 புலம்பெயர்ந்தோர் நாடுகடத்தப்படும் அபாயம்: பிரதமரின் முடிவுக்கு எதிர்ப்பு

Share

கனடாவிலிருந்து 70,000 புலம்பெயர்ந்தோர் நாடுகடத்தப்படும் அபாயம்: பிரதமரின் முடிவுக்கு எதிர்ப்பு

செப்டம்பர் மாதம் முதல், குறைந்த ஊதிய தற்காலிக பணியாளர்கள் மற்றும் நிரந்தரக் குடியிருப்பு அனுமதி பெறுவோரின் எண்ணிக்கையைக் குறைக்க திட்டமிட்டுள்ளதாக திங்களன்று அறிவித்தார் கனடா பிரதமர்.

அத்துடன், கல்வி அனுமதிகளையும் குறைக்க திட்டமிட்டுள்ளது கனடா அரசு. மேலும், 70,000 மாணவர்கள் நாடுகடத்தப்படும் அபாயமும் உருவாகியுள்ளது.

ஆகவே, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் முடிவை எதிர்த்து கனடா முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகளில் சர்வதேச மாணவர்கள் இறங்கியுள்ளார்கள்.

முன்னர் பிரின்ஸ் எட்வர்ட் தீவில் மட்டும் மாணவர்களின் ஆர்ப்பாட்டங்கள் நிகழ்ந்த நிலையில், தற்போது, ஒன்ராறியோ, மனித்தோபா மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா உட்பட பல மாகாணங்களில் பேரணிகள் துவங்கியுள்ளன.

வீட்டை அடமானம் வைத்து, கடனும் வாங்கி கனடாவுக்கு வந்து, கல்வி கற்று, பணி செய்து, வரிகளும் செலுத்தியும், இப்போது நாடுகடத்தப்படும் நிலைக்கு ஆளாகியுள்ளார்கள் புலம்பெயர்ந்தோர் பலர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
22 2
இலங்கைசெய்திகள்

ஐக்கிய நாடுகளின் பட்டிலில் இந்தியாவை முந்திய இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் பட்டியலில், இலங்கைக்கு 93வது இடம் கிடைத்துள்ளது. வறுமை...

21 2
இலங்கைசெய்திகள்

இருநூறு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசாங்கம்

நாடு தழுவிய ரீதியில் 200 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம்...

20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered 3
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான...