6 45 scaled
உலகம்செய்திகள்

அழிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட அரிய பூ., 15 ஆண்டுகள் கழித்து பிரித்தானியாவில் கண்டுபிடிப்பு

Share

அழிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட அரிய பூ., 15 ஆண்டுகள் கழித்து பிரித்தானியாவில் கண்டுபிடிப்பு

பிரித்தானியாவில் கடந்த 15 ஆண்டுகளாக காணப்படாமல் இருந்த மிகவும் அரிய பூ Ghost Orchid சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த பூ முன்பு அழிந்துவிட்டது என்று அறிவிக்கப்பட்டது, ஆனால் இப்போது இங்கிலாந்தில் உள்ள காட்டுப் பகுதியில் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதன் இருப்பிடத்தைப் பாதுகாக்கும் நோக்கில், இந்த இடம் ரகசியமாக வைத்திருக்கப்பட்டுள்ளது.

இந்த பூவுக்கு வெள்ளை நிறம் இருப்பதுடன், இது அதிகம் வெப்பம் இல்லாத காடுகளின் அடியில் வளரக்கூடியது.

இதுவரை பிரித்தானியாவில் வெறும் ஆறே பேர் மட்டுமே இந்த பூவைக் கண்டுள்ளனர் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

இத்தகைய பூவிற்கு இலைகள் கிடையாது, மேலும் இதற்கு சூரிய ஒளி தேவையில்லை, எனவே அது பூக்கும் சரியான சூழ்நிலைகளில் மட்டுமே பூவாக முளைக்கும்.

இந்த அரிய பூவை கண்டுபிடித்த மருத்துவர் ரிச்சர்ட் பேட், இது பிரித்தானியாவில் இனியும் அழியாமல் இருக்கும் என்ற நம்பிக்கையை அளிக்கின்றது என்று கூறியுள்ளார்.

இந்த கண்டுபிடிப்பு வனவிலங்கு பாதுகாப்பு நிபுணர்களால் உறுதிப்படுத்தப்பட்டு, இது 1854 முதல் இதுவரை பூவாக கண்டுபிடிக்கப்பட்டது என்பது உறுதியாகும்.

இந்த பூவைக் கொய்யவோ அல்லது தோண்டியெடுக்கவோ சட்டத்தால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
26 6990101d03ddb
செய்திகள்அரசியல்இலங்கை

அரகலய நிதிப் பின்னணி: ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை கோரும் நாமல் ராஜபக்ஷ!

இலங்கையில் 2022-ஆம் ஆண்டு இடம்பெற்ற ‘அரகலய’ போராட்டம் தொடர்பாகவும், அதற்கு வெளிநாடுகளில் இருந்து கிடைத்ததாகக் கூறப்படும்...

dailythanthi 2026 02 14 giawqio6 pul
செய்திகள்இந்தியா

புல்வாமா வீரர்களுக்கு 7-ம் ஆண்டு வீரவணக்கம்: நாடு முழுவதும் கருப்பு தினம் அனுசரிப்பு!

கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் திகதி, ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் சென்ற...

1763708534 drug 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போதைப்பொருள் கும்பலுக்கு மரண அடி! – ஒரே நாளில் 820 பேர் கைது.

இலங்கை அரசாங்கம் மற்றும் காவல்துறை இணைந்து முன்னெடுத்து வரும் ‘நேஷன் யுனைடெட் – நேஷனல் டிரைவ்’...

images 14
செய்திகள்அரசியல்இலங்கை

நுரைச்சோலையில் பாரிய நிலக்கரி ஊழல்? – 5 கப்பல்களும் தரமற்றவை என சஜித் பிரேமதாச அதிரடி குற்றச்சாட்டு!

நுரைச்சோலையில் அமைந்துள்ள லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்காக அண்மையில் இறக்குமதி செய்யப்பட்ட ஐந்து நிலக்கரி...