14 19
உலகம்செய்திகள்

பிரித்தானிய இளவரசர் வில்லியம், ஹரி பிரிய காரணமாய் அமைந்த தொலைபேசி அழைப்பு

Share

பிரித்தானிய இளவரசர் வில்லியம், ஹரி பிரிய காரணமாய் அமைந்த தொலைபேசி அழைப்பு

இளவரசர் ஹரியின் மனைவியாகிய மேகன் ராஜ குடும்பத்துக்குள் வந்த நாள் முதலே அவருக்கு ராஜ குடும்பத்தினரை பிடிக்கவில்லை என்பது அனைவரும் அறிந்த விடயமாகும்.

இருப்பினும், மேகன் தொடர்பில், இளவரசர் வில்லியம் ஹரிக்கிடையிலான ஒரு தொலைபேசி அழைப்பு இரு குடும்பங்களையும் பிரித்ததாகத் ராஜ குடும்ப நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

குறித்த தொலைபேசி அழைப்புக்குப் பின், இளவரசர் வில்லியம், தன் குடும்பத்தினரை இளவரசர் ஹரி குடும்பத்தினரிடம் இருந்து பிரித்துவிட்டதாக, ராபர்ட் லேசி (Robert Lacey) என்பவர் எழுதிய, Battle of the Brothers என்னும் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், தன் தம்பி ஹரியை அழைத்த வில்லியம், மேகன், ராஜ குடும்பத்தின் மீது வெறுப்பு வைத்துள்ளதாகவும், ராஜ குடும்பத்திலிருந்து வெளியேறி அமெரிக்காவுக்கே திரும்பிவிட ஆரம்பம் முதலே அவர் திட்டம் வைத்திருக்கக்கூடும் என்றும் கூறியதாக கூறப்படுகிறது.

தன் மனைவியைக் குறித்து அண்ணன் வில்லியம் கூறியதைக் கேட்டு கோபத்தில் ஹரி தொலைபேசி இணைப்பைத் துண்டித்துவிட, அதன் பிறகு வில்லியம் தன் குடும்பத்தினரை இளவரசர் ஹரி குடும்பத்தினரிடம் இருந்து பிரித்துவிட்டதாக ராபர்ட் தனது புத்தகத்தில் எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....