உலகம்செய்திகள்

போர் பதற்றத்தின் மத்தியில் உக்ரைன் சென்ற மோடி அளித்த பரிசு

10 26
Share

போர் பதற்றத்தின் மத்தியில் உக்ரைன் சென்ற மோடி அளித்த பரிசு

இந்திய பிரதமர் நரேந்திர மோடி உக்ரைனுக்கு, போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மருத்துவ சேவைகளை விரைவாக ஏற்படுத்துவதற்காக நான்கு மொபைல் மருத்துவமனை யூனிட்களை (Mobile Hospital Units) பரிசாக வழங்கியுள்ளார்.

குறித்த யூனிட்கள், “BHISHM” எனப்படும் (Bharat Health Initiative for Sahyog Hita & Maitri) கட்டங்களில் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த மொபைல் மருத்துவமனைகள், எந்த இடத்திலும் 10 நிமிடங்களில் செயல்படக்கூடிய மருத்துவ அமைப்புகளை உருவாக்க உதவுகின்றன.

இதில் 200-க்கும் மேற்பட்ட காயமடைந்தவர்களுக்கு உடனடியாக சிகிச்சை வழங்குவதற்கு தேவையான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இவை முக்கிய மருத்துவ உதவிகளை வழங்குவதில் உக்ரைனுக்கு பெரும் ஆதரவாக இருக்கும் என்று இந்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்த யூனிட்களை வழங்குவதன் மூலம் இந்தியா, உலகளவில் மனிதாபிமான உதவிகளை வழங்கும் பணியில் உறுதியாக உள்ளது என்பதை பிரதமர் மோடி இந்த நடவடிக்கையால் மேலும் உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...