11 20
உலகம்செய்திகள்

பிரித்தானியர்களுக்கு ஏற்பட்டுள்ள புதிய அச்சம் : ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

Share

பிரித்தானியர்களுக்கு ஏற்பட்டுள்ள புதிய அச்சம் : ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

பிரித்தானியாவில் அண்மையில் வெடித்த வன்முறைகளுக்குப் பிறகு, பிரித்தானியர்களுக்கு புதிதாக ஒரு அச்சம் ஏற்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

பிரித்தானியாவில் சமீபத்தில் புலம்பெயர்ந்தோருக்கு எதிராக வெடித்த வன்முறைகளைத் தொடர்ந்து, பிரித்தானியர்களில் நான்கில் மூன்று பங்கு மக்களுக்கு வலதுசாரியினர் குறித்த அச்சம் உருவாகியுள்ளதாக ஐப்சோஸ்(Ipsos) என்னும் ஆய்வமைப்பு வெளியிட்ட சமீபத்திய ஆய்வு முடிவுகள் குறிப்பிடுகின்றன.

மேலும், அந்த வன்முறைகளுக்கு, பொதுவாக, அரசியல்வாதிகள் யாரும் சரியாக பதிலளிக்கவில்லையென மக்கள் கருதுவதாகவும் அந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

குறித்த ஆய்வில் மக்களிடம் எந்தெந்த விடயங்கள் உங்களுக்கு கவலையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளன என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

அதற்கு, பொது சேவைகள் குறித்து என 84 சதவிகிதம் பேரும், பொருளாதாரம் குறித்துதான் அதிக கவலை என 83 சதவிகிதம் பேரும் பதிலளித்துள்ளனர்.

அடுத்தபடியாக, வலதுசாரி பயங்கரவாதம் குறித்துதான் தாங்கள் அதிகம் கவலைப்படுவதாக, 73 சதவிகிதம் பிரித்தானியர்கள் தெரிவித்துள்ளார்கள்.

விடயம் என்னவென்றால், இதே கேள்விகளை இந்த ஆண்டு மார்ச் மாதம் மக்களிடையே கேட்டபோது, பயங்கரவாதம் குறித்து தாங்கள் அதிகம் கவலைப்படுவதாக தெரிவித்தவர்களின் எண்ணிக்கையைவிட, தற்போது வலதுசாரி பயங்கரவாதம் குறித்து கவலைப்படுவதாக தெரிவித்துள்ளவர்கள் எண்ணிக்கை 11 சதவிகிதம் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...