12 19
உலகம்செய்திகள்

பிரித்தானியாவின் புதிய பிரதமர் தொடர்பில் ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

Share

பிரித்தானியாவின் புதிய பிரதமர் தொடர்பில் ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

பிரித்தானியாவில் புதிய அரசு பொறுப்பேற்று இரண்டு மாதங்கள் கூட ஆகாத நிலையில் பிரித்தானிய பிரதமரின் செல்வாக்கு குறைந்துள்ளதாக அண்மைய ஆய்வொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

ஜூலை மாதம் 5ஆம் திகதி பிரித்தானியாவின் பிரதமராக தொழில் கட்சித் தலைவரான கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer) பதவியேற்றார்.

அவர் பிரதமராக பதவியேற்று இரண்டு மாதங்கள் கூட ஆகாத போதும், அதற்குள் பிரித்தானியா தவறான திசையில் சென்றுகொண்டிருப்பதாக பொதுமக்களில் அரைவாசிக்கும் மேற்பட்டோர் தெரிவித்துள்ளதாக சமீபத்திய ஆய்வொன்று தெரிவிக்கிறது.

இந்த மாதம், மாதம் 9ஆம் திகதி முதல் 12ஆம் திகதிவரை, ஆய்வமைப்பான Ipsos மேற்கொண்ட ஆய்வொன்றில், பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், துணைப்பிரதமரான ஏஞ்சலா ரேய்னர் மற்றும் சேன்ஸலரான ரேச்சல் ரீவ்ஸ் ஆகியோரின் செல்வாக்கு மக்களிடையே வீழ்ச்சியடைந்துள்ளமை தெரியவந்துள்ளது.

இந்நிலையில் ஆய்வில் பங்கேற்ற பிரித்தானியர்களில் 52 சதவிகிதம் பேர் பிரித்தானியா தவறான திசையில் சென்றுகொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்கள்.

மேலும், 22 சதவிகிதத்தினர் மட்டுமே பிரித்தானியா சரியான திசையில் சென்றுகொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்கள். 19 சதவிகிதத்தினர் நடுநிலையாக பதிலளித்துள்ளார்கள்.

Share
தொடர்புடையது
images 1
செய்திகள்இலங்கை

ரயில் பயணிகள் அவதானம்: நவம்பர் மாதப் பருவச் சீட்டின் செல்லுபடி காலம் டிசம்பர் 7 வரை நீடிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் ரயில் போக்குவரத்துப் பாதிப்புகள் காரணமாக, நவம்பர் மாதத்துக்கான ரயில்...

images
செய்திகள்இலங்கை

மீட்புப் பணிகள் நடக்கும் இடங்களில் ட்ரோன்களைப் பறக்க விட வேண்டாம்: இலங்கை விமானப்படை எச்சரிக்கை!

நாட்டில் ஏற்பட்டுள்ள பேரழிவு காரணமாகப் பல பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக இடம்பெற்றுவரும் நிலையில், அப்பகுதிகளில்...

24 6717c3776cee3
செய்திகள்இலங்கை

சீனாவின் பாரிய நிவாரண உதவி: இலங்கைக்காக 1 மில்லியன் அமெரிக்க டாலர்!

நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பேரழிவின் தாக்கத்தில் இருந்து இலங்கை மீள்வதற்காக, சீனா அரசாங்கம் இரண்டு வகைகளில்...

download
செய்திகள்இலங்கை

கண்டி மாவட்டத்தில் விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் விநியோகம்: தரைவழியாக அணுக முடியாத பகுதிகளுக்கு உதவி!

கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக தரைவழியாக அணுக முடியாத பகுதிகளில் சிக்கித் தவிக்கும்...