6 16 scaled
உலகம்

பிரித்தானியாவில் வெள்ளையின இளைஞர்களால் தாக்கப்பட்ட இந்திய வம்சாவளி இளம்பெண்

Share

பிரித்தானியாவில் வெள்ளையின இளைஞர்களால் தாக்கப்பட்ட இந்திய வம்சாவளி இளம்பெண்

பிரித்தானியாவில் பிரித்தானிய குடியுரிமை பெற்று பல ஆண்டுகளாக வாழ்ந்துவந்தும், தாங்கள் உண்மையாகவே பிரித்தானிய குடிமக்கள்தானா என சந்தேகப்படும் நிலைமைக்கு ஆளாகியிருக்கிறார்கள் பலர்.

ஸ்கொட்லாந்தின் முன்னாள் முதல் அமைச்சருக்குக் கூட இந்த விடயத்தில் விதிவிலக்கில்லை!

இந்திய வம்சாவளியினரான சுனிதா (Sunita Thind), பிரித்தானிய குடியுரிமை பெற்று பல ஆண்டுகளாக இங்கிலாந்திலுள்ள Derby என்னுமிடத்தில் வாழ்ந்துவருகிறார்.

இந்த வாரத் துவக்கத்தில் குருத்வாராவுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்திருக்கிறார் சுனிதா.

அப்போது, திடீரென ஏதோ ஒரு பொருள் வந்து அவரது தலையின் பின்பக்கத்தில் தாக்கியுள்ளது. அதிர்ச்சியில் தடுமாறி அருகிலுள்ள விளக்குக்கம்பத்தைப் பிடித்துக்கொண்டு சாய்ந்திருக்கிறார் சுனிதா.

திரும்பிப் பார்த்தால், சில வெள்ளையின இளைஞர்கள் நின்று அவரைப் பார்த்து கேலியாக சிரித்துக்கொண்டிருந்திருக்கிறார்கள்.

அத்துடன் மோசமான வார்த்தைகளால் அவரை விமர்சித்து, உன் நாட்டுக்குத் திரும்பிப் போ என சத்தமிட்டிருக்கிறார்கள் அந்த இளைஞர்கள்.

அவர்கள் அவர் மேல் வீசியது ஒரு கோக் கேன். தலையில் அடிபட்டு, உடையில் கோக் கொட்டி, அதிர்ச்சியுடன் வீடு திரும்பிய சுனிதா, இப்போதெல்லாம் ஆள்நடமாட்டமில்லாத தெருக்கள் பக்கமே போவதில்லை என்கிறார்.

2000ஆம் ஆண்டிலும் இதேபோல ஒரு கூட்டம் தன்னை இனரீதியாக தாக்கியதாக தெரிவிக்கும் சுனிதா, 24 ஆண்டுகள் ஆகியும் எந்த மாற்றமும் இல்லை என்கிறார்.

அத்துடன், தான் பொலிசாரிடமும் புகாரளிக்கவில்லை என்கிறார் சுனிதா. முன்பு நான் தாக்கப்பட்டபோது புகாரளிக்க, அப்போது அவர்கள் தன் புகாரை சீரியசாக எடுத்துக்கொள்ளவில்லை. இப்போது மட்டும் அவர்கள் தன் புகாரை சீரியசாக எடுத்துக்கொள்ளப்போகிறார்களா என்கிறார் அவர்.

ஆக, எத்தனை ஆண்டுகள் ஆனாலும், இந்த இனவெறுப்பும், வன்மமும் வெள்ளையர்களில் சிலருக்கு நீங்கவே நீங்காது போலிருக்கிறது.

சாதாரண மக்களுக்குத்தான் இந்த நிலை என்றில்லை. பிரித்தானியாவில் வெடித்த புலம்பெயர்ந்தோர் மற்றும், ஆசியர்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கெதிரான வன்முறையைத் தொடர்ந்து, ஸ்கொட்லாந்தின் முன்னாள் முதல் அமைச்சரான Humza Yousafம் கூட, இதே கருத்தைத்தான் தெரிவித்திருக்கிறார்.

அந்த வன்முறைகளுக்குப் பிறகு, பிரித்தானியாவில் என் மற்றும் என் குடும்பத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது என்கிறார் அவர்.

Share
தொடர்புடையது
20 2
உலகம்செய்திகள்

மில்லியன் கணக்கான மக்கள் திரள்வர் என எதிர்பார்ப்பு: அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கு ஒத்திவைப்பு!

அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்ட ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின்...

19 1
செய்திகள்உலகம்

ஈரான் மீதான அமெரிக்க – இஸ்ரேலிய தாக்குதல்: ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைக் குழு கடும் கண்டனம்!

ஈரானில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்து வரும் ஐக்கிய நாடுகள் சபையின்...

18 3
செய்திகள்உலகம்

ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல் சரியானது: அமெரிக்க வெளிவிவகாரக் குழுத் தலைவர் பிரையன் மாஸ்ட் அதிரடி!

அல்ஜெசீரா ஊடகத்திற்கு வழங்கிய பிரத்யேக நேர்காணலில், அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையின் வெளிவிவகாரக் குழுத் தலைவர் பிரையன்...

16 3
செய்திகள்உலகம்

பிரித்தானிய குடிவரவு விதிகளில் அதிரடி மாற்றம்: குறிப்பிட்ட 4 நாடுகளுக்கு விசா வழங்க தடை!

பிரித்தானியாவிற்கு மாணவர் விசா மற்றும் பணியாளர் விசா மூலம் வந்து தஞ்சம் கோருபவர்களின் எண்ணிக்கை கடந்த...