இலங்கைஉலகம்செய்திகள்

ஷேக் ஹசீனா செய்த பெரும் தவறு : ரணில் சுட்டிக்காட்டு

Share
23 2
Share

ஷேக் ஹசீனா செய்த பெரும் தவறு : ரணில் சுட்டிக்காட்டு

பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா(Sheikh Hasina), முன்னாள் பிரதமர் காலிதா ஷியாவை நீண்ட காலத்திற்கு முன்பே சிறையிலிருந்து விடுவித்திருந்தால், இன்னும் நாட்டின் பிரதமராக இருந்திருப்பார் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றின் போது அவர் இதனை குறிப்பிட்டார்.

எனினும் தற்போது காலிதா ஷியா சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டதை வரவேற்பதாக ரணில் கூறினார்.

இதற்கிடையில், நிதி நெருக்கடியின் போது இலங்கைக்கு உதவ முன்வந்ததால், தற்போது நாட்டை விட்டு வெளியேறிய ஹசீனாவுக்கு ரணில் விக்ரமசிங்க தமது நன்றிகளை தெரிவித்தார்.

இலங்கைக்கு உண்மையில் பணம் தேவைப்படும்போது அவர் 200 மில்லியன் டொலர்களை வழங்கியதால், அவரை, தாம் இன்னும் நினைவில் வைத்திருப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இதேவேளை பங்களாதேஷில் அமைதி நிலவும் என்று நம்புவோம் என்று அவர் தெரிவித்தார்.

Share
Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...