உலகம்

இளவரசர் ஹரியின் நிதி நிலைமை குறித்து கவலை: அள்ளிக் கொடுத்த மன்னர் சார்லஸ்

Share
6 32
Share

இளவரசர் ஹரியின் நிதி நிலைமை குறித்து கவலை: அள்ளிக் கொடுத்த மன்னர் சார்லஸ்

பிரித்தானிய இளவரசர் ஹரி ராஜ குடும்பத்தைவிட்டு வெளியேறியதைத் தொடர்ந்து, அவர் வருவாய்க்கு என்ன செய்வார் என மன்னர் சார்லஸ் கவலையிலிருப்பதாக ராஜ குடும்ப எழுத்தாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இளவரசர் ஹரி தன்னிடமிருக்கும் பணம் செலவழிந்துபோனால், அதற்குப் பின் என்ன செய்வார் என அவரது தந்தையான மன்னர் சார்லசுக்கு கவலை இருப்பதாக ராஜ குடும்ப எழுத்தாளரான ராபர்ட் ஜாப்சன் (Robert Jobson) என்பவர் தெரிவித்துள்ளார்.

என்றாலும், தன் பிள்ளைகள் எப்போதுமே கஷ்டப்படக்கூடாது என்னும் எண்ணம் கொண்டவர் சார்லஸ்.

ஹரி தனது தொலைக்காட்சி பேட்டிகளிலும், தன் சுயசரிதைப் புத்தகத்திலும், தன் குடும்பத்தைக் குறித்து மோசமாக எழுதியதால் எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து, அவரது வருவாயில் பின்னடைவு ஏற்படத் துவங்கியது.

ஆகவே, தன் மகன் கஷ்டப்படக்கூடாது என்பதற்காக சார்லஸ் ஹரிக்கு கணிசமான தொகை ஒன்றைக் கொடுத்ததாகத் தெரிவிக்கிறார், ராஜ குடும்ப எழுத்தாளரான ராபர்ட். அத்துடன், அவருக்கு வழங்கும் நிதி உதவியை அவர் முற்றிலும் நிறுத்திவிடவில்லை என்றும் கூறியுள்ளார் அவர்.

Share
Related Articles
16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

5 8
உலகம்செய்திகள்

இந்தியாவின் தாக்குதலுக்கு பாகிஸ்தான் கண்டனம்

இந்தியா மேற்கொண்ட ஏவுகணைத் தாக்குதலை “தூண்டுதலில்லாததும், வெளிப்படையான போர் நடவடிக்கையும்” எனவும் பாகிஸ்தான் கடுமையாக கண்டித்துள்ளது....

6 9
உலகம்செய்திகள்

பாகிஸ்தானுக்கு இந்தியாவின் பதிலடி! நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட பதிவு

பாகிஸ்தான் மீது இந்தியா ஏவுகணை தாக்குதல் நடத்தியமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு...

7 8
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் மீது இந்தியா ஏவுகணை தாக்குதல்

பாகிஸ்தான்(Pakistan) மற்றும் பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இருக்கும் ஜம்மு-காஷ்மீர் ஆகிய இடங்களில் ஒன்பது இலக்குகள் மீது ஏவுகணைத்...