6 32
உலகம்

இளவரசர் ஹரியின் நிதி நிலைமை குறித்து கவலை: அள்ளிக் கொடுத்த மன்னர் சார்லஸ்

Share

இளவரசர் ஹரியின் நிதி நிலைமை குறித்து கவலை: அள்ளிக் கொடுத்த மன்னர் சார்லஸ்

பிரித்தானிய இளவரசர் ஹரி ராஜ குடும்பத்தைவிட்டு வெளியேறியதைத் தொடர்ந்து, அவர் வருவாய்க்கு என்ன செய்வார் என மன்னர் சார்லஸ் கவலையிலிருப்பதாக ராஜ குடும்ப எழுத்தாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இளவரசர் ஹரி தன்னிடமிருக்கும் பணம் செலவழிந்துபோனால், அதற்குப் பின் என்ன செய்வார் என அவரது தந்தையான மன்னர் சார்லசுக்கு கவலை இருப்பதாக ராஜ குடும்ப எழுத்தாளரான ராபர்ட் ஜாப்சன் (Robert Jobson) என்பவர் தெரிவித்துள்ளார்.

என்றாலும், தன் பிள்ளைகள் எப்போதுமே கஷ்டப்படக்கூடாது என்னும் எண்ணம் கொண்டவர் சார்லஸ்.

ஹரி தனது தொலைக்காட்சி பேட்டிகளிலும், தன் சுயசரிதைப் புத்தகத்திலும், தன் குடும்பத்தைக் குறித்து மோசமாக எழுதியதால் எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து, அவரது வருவாயில் பின்னடைவு ஏற்படத் துவங்கியது.

ஆகவே, தன் மகன் கஷ்டப்படக்கூடாது என்பதற்காக சார்லஸ் ஹரிக்கு கணிசமான தொகை ஒன்றைக் கொடுத்ததாகத் தெரிவிக்கிறார், ராஜ குடும்ப எழுத்தாளரான ராபர்ட். அத்துடன், அவருக்கு வழங்கும் நிதி உதவியை அவர் முற்றிலும் நிறுத்திவிடவில்லை என்றும் கூறியுள்ளார் அவர்.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 8
உலகம்செய்திகள்

xபோர் பதற்றத்திற்கு மத்தியில் ஈரானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் ஈரானை தொடர்ந்து தாக்கிவரும் நிலையில் வடக்கு ஈரானில் 5.1 ரிக்டர் அளவிலான...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 6
உலகம்செய்திகள்

தீவிரம் அடையும் ஈரான் – இஸ்ரேல் போர் – இலங்கைக்கு உதவும் இந்தியா

போர் நடவடிக்கை காரணமாக ஈரானில் சிக்கியுள்ள இலங்கையர்களை அழைத்து வர இந்தியா உதவ முன்வந்துள்ளது. இஸ்ரேல்...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 2
உலகம்செய்திகள்

ஈரான் விடயத்தில் அமெரிக்க புலனாய்வு இயக்குநரின் தவறு..! ட்ரம்ப் கூறிய விடயம்

அமெரிக்காவின் தேசிய புலனாய்வு இயக்குநர் துளசி கப்பார்ட், ஈரான் மற்றும் அணு ஆயுதம் தொடர்பில் தவறான...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered 3
உலகம்செய்திகள்

செம்மணி மனிதபுதைகுழி தொடர்பில் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சருக்கு கடிம் எழுதிய உமா குமரன்

செம்மணி மனித புதைகுழி குறித்த விசாரணைக்கு சர்வதேச நாடுகளுடன் இணைந்து பிரித்தானியாவும் ஆதரவளிக்கவேண்டும் என்று பிரித்தானிய...