12 4
உலகம்செய்திகள்

கமலா ஹாரிஸை தொடர்ந்து அமெரிக்காவில் கவனம் பெற்ற மற்றுமொரு இந்திய வம்சாவளி பெண்

Share

கமலா ஹாரிஸை தொடர்ந்து அமெரிக்காவில் கவனம் பெற்ற மற்றுமொரு இந்திய வம்சாவளி பெண்

அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் போட்டியிட்ட போது, அவரது துணை ஜனாதிபதி பொறுப்புக்கு நியமிக்கப்பட்ட, இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸூக்கு கிடைத்த அதே ஊடக வெளிச்சம் தற்போது மற்றுமொறு இந்திய வம்சாவளி பெண்ணுக்கு கிடைத்துள்ளது.

அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது.இதில் குடியரசு கட்சி ஜனாதிபதி வேட்பாளராக டொனால்ட் ட்ரம்ப்(Donald Trump) போட்டியிடுவது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவர் ஜனாதிபதியாக தெரிவானால் துணை ஜனாதிபதியாக செனட்டர் ஜே.டி.வொன்ஸ் தெரிவாவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சூழ்நிலையில் ஜே.டி.வொன்ஸை விட அவருடைய இந்திய வம்சாவளி மனைவியான உஷா சிலுக்குரி தரப்பில் அமெரிக்க ஊடகங்கள் அதிக கவனம் வெலுத்தி வருகின்றன.

இந்திய வம்சாவளியை சேர்ந்த உஷா சிலுக்குரி சட்டக் கல்லூரியில் வைத்தே 2013ல் ஜே.டி.வான்ஸை சந்தித்துள்ளார்.

குழு விவாதம் ஒன்றில் இருவரும் ஒரே அணியில் கலந்து கொண்டுள்ள அதன் பின்னர் இருவரும் வாழ்க்கை முழுவதும் ஒன்றாக பயணிக்க முடிவு செய்துள்ளனர்.

யேல் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற உஷா, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலும் பட்டம் பெற்றுள்ளதோடு, Munger, Tolles, மற்றும் Olson ஆகிய நிறுவனங்களுக்கான சட்டத்தரணியாகவும் பணியாற்றியுள்ளார்.

மேலும், கலிபோர்னியா, ஓஹியோ மற்றும் கொலம்பியா மாவட்டம் ஆகிய நீதிமன்றங்களில் சட்டத்தரணியாக பணியாற்றும் உரிமம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

2014இல் ஜே.டி.வான்ஸ் – உஷா தம்பதி திருமணம் செய்துகொண்டுள்ளனர். இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்த தம்பதியின் மகளாக பிறந்த உஷா, இந்து முறைப்படியே தமது வாழ்க்கையை முன்னெடுத்து வருவதாகவும் குறிப்பிடப்படுகிறது.

Share
தொடர்புடையது
22 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கடற்றொழில் அதிகாரிகளுக்கு இலத்திரனியல் மோட்டார் சைக்கிள்கள்: இந்திய அரசு நிதியுதவி!

இலங்கை கடற்றொழில் துறையில் களப்பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளின் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், அவர்களுக்கு இலத்திரனியல்...

21 14
உலகம்செய்திகள்

ஈரான் தாக்குதலால் ட்ரம்ப் அதிர்ச்சி: முன்கூட்டியே எச்சரித்த உளவுத்துறை – வளைகுடாவில் பதற்றம்!

மத்திய கிழக்கு நாடுகளில் ஈரான் நடத்தி வரும் சரமாரி பதிலடித் தாக்குதல்கள் தமக்கு “ஆச்சரியம்” அளிப்பதாக...

20 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மன்னார் மாவட்ட விவசாயி மற்றும் மீனவர்களுக்கு எரிபொருள் வழங்க விசேட பொறிமுறை

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக நாடு தழுவிய ரீதியில் எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டுள்ள...

19 14
செய்திகள்உலகம்

ஈரான் தேசிய பாதுகாப்புச் சபை செயலாளர் அலி லாரிஜானி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவிப்பு!

ஈரானின் உயர்மட்ட தேசிய பாதுகாப்புச் சபையின் செயலாளரான அலி லாரிஜானி (Ali Larijani) இஸ்ரேலியத் தாக்குதல்...