24 667f7cfe0ff26 25
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் தேர்தல் நடப்பதே தெரியாது: பிரித்தானிய பெண் பிரபலம் கூறியுள்ள விடயம்

Share

பிரித்தானியாவில் தேர்தல் நடப்பதே தெரியாது: பிரித்தானிய பெண் பிரபலம் கூறியுள்ள விடயம்

பிரித்தானியாவின் பிரபல டென்னிஸ் வீராங்கனை ஒருவர், இன்று பிரித்தானியாவில் தேர்தல் நடப்பதே தனக்குத் தெரியாது என்றூ கூறியுள்ளார்.

பிரித்தானியாவின் பிரபல டென்னிஸ் வீராங்கனையான எம்மா ரடுகானு (21) விம்பிள்டன் போட்டிகளில் பங்கேற்றுவரும் நிலையில், தேர்தலில் வாக்களிக்கப்போகிறீர்களா என அவரிடம் நேற்று ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு பதிலளித்த எம்மா, தேர்தல் நாளை என்பதே எனக்குத் தெரியவில்லை என்று பதிலளித்தார். அத்துடன், தான் வாக்களிக்கப்போவதில்லை என்றும், ஓய்வெடுத்துவிட்டு அடுத்த போட்டிக்காக பயிற்சி செய்ய இருப்பதாகவும் தெரிவித்தார்.

மற்றொரு பிரித்தானிய டென்னிஸ் வீராங்கனையான Katie Boulterஇடமும் நீங்கள் தேர்தலில் வாக்களிப்பீர்களா என கேட்கப்பட்டபோது, அவரும் இப்போதைக்கு விளையாட்டில் கவனம் செலுத்தப்போகிறேன் என்றார்.

Harriet Dart என்னும் பிரித்தானிய வீராங்கனையும் விளையாட்டைத் தவிர தான் வேறு எந்த விடயத்திலும் தலையிடப்போவதில்லை என்றார்.

 

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 17
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையர்கள் அகதிகளாக வாட வேண்டிய அவசியமில்லை! – தமிழக முதல்வரின் கோரிக்கைக்கு நாமல் ராஜபக்ஷ வரவேற்பும், ஆலோசனையும்!

தமிழக முகாம்களில் உள்ள 89,000 இலங்கையர்களுக்கு இந்தியக் குடியுரிமை அல்லது நீண்டகால விசா வழங்கக் கோரி...

image 1200x800 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

2026-இல் 19 நாட்களுக்கு மதுபான விற்பனைக்குத் தடை! – மதுவரித் திணைக்களம் அதிரடி அறிவிப்பு!

2026-ஆம் ஆண்டில் பௌர்ணமி தினங்கள் மற்றும் தேசிய விடுமுறை நாட்கள் உட்பட மொத்தம் 19 நாட்களுக்கு...

image 1200x800 26
செய்திகள்அரசியல்இலங்கை

AI-யால் உலகை வெல்வோம்! – இந்தியப் பிரதமரின் அழைப்பின் பேரில் நாளை டெல்லி செல்கிறார் ஜனாதிபதி அநுர!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பை ஏற்று, புதுடெல்லியில் நடைபெறவுள்ள ‘இந்தியா – AI...

image 1200x800 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வாகன விலைகள் குறையவே வாய்ப்பு! – வரி அதிகரிப்புச் செய்திகளை மறுக்கும் நிதி அமைச்சு; விற்பனையாளர்களின் தந்திரம் அம்பலம்!

இலங்கையில் வாகன இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாகப் பரப்பப்படும் செய்திகள் முற்றிலும் அடிப்படையற்றவை என்றும், இது பொதுமக்களிடையே...