24 6686bc6872e8addddddddddd
உலகம்செய்திகள்

பெண்ணை உயிருடன் விழுங்கிய 30 அடி மலைப்பாம்பு

Share

பெண்ணை உயிருடன் விழுங்கிய 30 அடி மலைப்பாம்பு

இந்தோனேசியாவில் (Indonesia) காணாமல் போன பெண் மலைப்பாம்பின் வயிற்றுக்குள் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இந்த கோர சம்பவம் நேற்று (3.7.2024) இந்தோனேசியா – தெற்கு சுலவேசியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், உயிரிழந்த பெண் தனது நோய்வாய்ப்பட்ட குழந்தைக்கு மருந்து வாங்குவதற்காக அவர் தனது வீட்டை விட்டு வெளியேறிய பின்னர் காணாமல் போயுள்ளார்.

பெண் மாயமானதாக அறிவிக்கப்பட்டு தேடுதல் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் பாம்பின் அருகில் குறித்த பெண்ணின் செருப்பு அவரது கணவரால் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்நிலையில், 16 அடி தூரத்தில் வாயிலிருந்து கால்கள் வெளியே நீட்டிய நிலையில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

36 வயதுடைய சிரியாட்டி என்ற பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் உள்ள மக்களுக்கு அதிகாரிகள் பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Share
தொடர்புடையது
11 1
செய்திகள்உலகம்

மார்ச் 3-இல் தோன்றும் ‘இரத்த நிலவு’: 58 நிமிடங்கள் நீடிக்கும் 2026-இன் முதல் சந்திர கிரகணம்!

2026 ஆம் ஆண்டின் முதலாவது சந்திர கிரகணம் எதிர்வரும் மார்ச் 3-ஆம் திகதி நிகழவுள்ளதாக சர்வதேச...

goldsteal cleanup
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தலவாக்கலையில் நூதனத் திருட்டு – சிசிடிவி காட்சி வெளியீடு!

தலவாக்கலை பிரதான நகரில் அமைந்துள்ள பிரபல நகைக்கடை ஒன்றில், நேற்று (24) பகல் வேளையில் வாடிக்கையாளர்...

10 1
செய்திகள்உலகம்

கால்பந்து மைதானம் அளவுள்ள பிரம்மாண்ட பவளம்! கிரேட் பேரியர் ரீஃபில் தாய்-மகள் குழுவின் வரலாற்றுச் சாதனை.

ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற கிரேட் பேரியர் ரீஃப் பகுதியில், இதுவரை ஆவணப்படுத்தப்பட்டவற்றிலேயே உலகின் மிகப்பெரிய பவளக் காலனியை...

09 1
செய்திகள்அரசியல்இலங்கை

ஈஸ்டர் தாக்குதல் பின்னணி: முன்னாள் புலனாய்வுத் தலைவர் சுரேஷ் சலே அதிரடி கைது – 72 மணிநேரத் தடுப்புக் காவல்!

இலங்கை வரலாற்றில் மிகக் கொடூரமான தாக்குதலான 2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில், முன்னாள்...