24 667f7cfe0ff26 28
உலகம்செய்திகள்

ரஷ்யாவில் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கியிருந்த விடுதியில் தீ விபத்து..5 பேர் பலியான சோகம்

Share

ரஷ்யாவில் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கியிருந்த விடுதியில் தீ விபத்து..5 பேர் பலியான சோகம்

ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கியிருந்த விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 5 பேர் பலியாகினர்.

மாஸ்கோவின் பலக்ஷிகா (Balashikha) புறநகர் பகுதியில் தங்கும் விடுதி ஒன்று உள்ளது. இங்கு வெளிநாட்டு புலம்பெயர் தொழிலாளர்கள் உட்பட பல பணியாளர்கள் தங்கியுள்ளனர்.

இந்த நிலையில் இரண்டாவது மாடி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மள மளவென தீ பரவியதைத் தொடர்ந்து பலர் உயிர் பயத்தில் சன்னல் வழியாக வெளியே குதித்து தப்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அவர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு, பலரை அங்கிருந்து பத்திரமாக மீட்டனர்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக 5 பேர் உடல் கருகி பலியாகினர். மேலும் சிலர் காயமடைந்தனர். முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது.

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...