24 667f7cfe0ff26 28
உலகம்செய்திகள்

ரஷ்யாவில் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கியிருந்த விடுதியில் தீ விபத்து..5 பேர் பலியான சோகம்

Share

ரஷ்யாவில் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கியிருந்த விடுதியில் தீ விபத்து..5 பேர் பலியான சோகம்

ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கியிருந்த விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 5 பேர் பலியாகினர்.

மாஸ்கோவின் பலக்ஷிகா (Balashikha) புறநகர் பகுதியில் தங்கும் விடுதி ஒன்று உள்ளது. இங்கு வெளிநாட்டு புலம்பெயர் தொழிலாளர்கள் உட்பட பல பணியாளர்கள் தங்கியுள்ளனர்.

இந்த நிலையில் இரண்டாவது மாடி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மள மளவென தீ பரவியதைத் தொடர்ந்து பலர் உயிர் பயத்தில் சன்னல் வழியாக வெளியே குதித்து தப்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அவர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு, பலரை அங்கிருந்து பத்திரமாக மீட்டனர்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக 5 பேர் உடல் கருகி பலியாகினர். மேலும் சிலர் காயமடைந்தனர். முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது.

 

Share

Recent Posts

தொடர்புடையது
images 2 3
செய்திகள்விளையாட்டு

டி20 உலகக் கிண்ணம்: பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்தியா! – 61 ஓட்டங்களால் அபார வெற்றி!

டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 27-ஆவது லீக் போட்டியில், பரம எதிரிகளான இந்தியா மற்றும்...

25 688daecf5398b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நாளை நீதிமன்றப் பணிகள் முடக்கம்! – சட்டத்தரணி படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பு!

பத்தரமுல்ல, அக்குரேகொட பகுதியில் இடம்பெற்ற திட்டமிட்ட துப்பாக்கிச் சூட்டில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் படுகொலை...

Screenshot 2026 02 15 222008
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றவாளிகளுக்குத் தடை! – புதிய தரவுத்தளம் மூலம் அரசாங்கம் அதிரடி நடவடிக்கை!

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றங்களுடன் தொடர்புடையவர்கள், சிறுவர்களுடன் நேரடியாகத் தொடர்புடைய எந்தவொரு பணிகளிலும் ஈடுபடுவதைத் தடுப்பதற்கான புதிய...

Screenshot 2026 02 15 222512
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் முதல்முறை: காசல் வீதி மருத்துவமனையில் இலவச IVF சிகிச்சை! – 2,000-க்கும் மேற்பட்ட தம்பதியினர் விண்ணப்பம்!

கொழும்பு காசல் வீதி மகளிர் மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள முற்றுமுழுதான இலவச செயற்கை கருத்தரிப்பு (IVF) சிகிச்சைக்காக...