4 14
உலகம்செய்திகள்

ரயிலில் Upper Berth Seat கீழே விழுந்ததால் பயணிக்கு நேர்ந்த சோக நிகழ்வு

Share

ரயிலில் Upper Berth Seat கீழே விழுந்ததால் பயணிக்கு நேர்ந்த சோக நிகழ்வு

விரைவு ரயில் ஸ்லீப்பர் பெட்டியில் மேல் படுக்கை கீழே விழுந்ததில் படுகாயமடைந்த பயணி உயிரிழந்துள்ளார்.

எர்ணாகுளம் – நிஸாமுதீன் விரைவு ரெயிலின் ஸ்லீப்பர் பெட்டியில் கேரளாவைச் சேர்ந்த அலிகான் (62) என்பவர் மீது மேல் படுக்கை விழுந்ததில் கழுத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அதாவது, கீழ் படுக்கையில் இருந்த அலிகான் மீது மேல் படுக்கை விழுந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால், ரயில்வே நிர்வாகம் தரப்பில், நடு படுக்கை உடைந்து விழவில்லை என்றும், மற்றொரு பயணி சங்கிலி மாட்டாததால் நடு படுக்கை வேகமாக வந்து மோதியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கேரளா காங்கிரஸ் தனது ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில், “இந்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் மற்றும் மோடி அரசின் கீழ் இப்படி தான் இருக்கிறது.

போதுமான ரயில்கள் அல்லது இருக்கைகள் இல்லை. நீங்கள் ரயிலில் ஏற நினைத்தால் இருக்கை இருக்காது. ரயிலில் உங்களுக்கு பாதுகாப்பு இருக்காது.

உங்களுக்கு இருக்கை இருந்தாலும் இருக்கை கீழே விழுந்து நீங்கள் கொல்லப்படலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
images 2 2
செய்திகள்உலகம்

சீனாவின் மிகவும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பல் ‘ஃபுஜியன்’ சேவையில் இணைப்பு: கடற்படை மேலாதிக்கத்தில் அமெரிக்காவுக்குப் போட்டி!

சீனாவின் மிகவும் திறமையான மற்றும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பலான ஃபுஜியன் (Fujian) இன்று (நவம்பர்...

24 6714e92d5188d
செய்திகள்அரசியல்இலங்கை

என்னை ஹிட்லர் என்கிறார்கள், பாவம்: குற்றங்களைக் கட்டுப்படுத்துவது குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பதிலடி!

நாட்டில் இடம்பெற்று வரும் குற்றங்களைக் கட்டுப்படுத்துவற்கு நடவடிக்கை எடுக்கும் போது தன்னைச் சிலர் ‘ஹிட்லர்’ என...

images 1 2
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணத்தில் தீடீர் சோதனைகள்: கூரிய ஆயுதங்கள் மற்றும் ஹெரோயினுடன் 9 பேர் கைது!

யாழ்ப்பாணக் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக நடத்தப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது,...

MediaFile 8
இலங்கைசெய்திகள்

போதைப்பொருள் ஒழிப்புக்கு ரூ. 2000 மில்லியன் ஒதுக்கீடு! மஹாபொல மற்றும் ஆசிரியர் மாணவர் கொடுப்பனவு ரூ. 2500 அதிகரிப்பு – ஜனாதிபதி அறிவிப்பு!

போதைப்பொருள் ஒழிப்பு, உயர்கல்வி மற்றும் தொழிற் பயிற்சியை மேம்படுத்துதல் ஆகிய துறைகளுக்காகப் பல முக்கிய நிதி...