24 666652323ba7a
இலங்கைஉலகம்செய்திகள்

அவுஸ்திரேலியா சென்ற இலங்கை பெண்ணுக்கு கொடிய பக்டீரியா தொற்று

Share

அவுஸ்திரேலியா சென்ற இலங்கை பெண்ணுக்கு கொடிய பக்டீரியா தொற்று

அவுஸ்திரேலியாவில்(Australia) வசிக்கும் தனது மகளை பார்க்கச்சென்ற இலங்கைப் பெண் ஒருவர் கொடிய பக்டீரியா தொற்று காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அல்சரால் பாதிக்கப்பட்ட ஒருவரின் தோலை இந்த நோயை உண்டாக்கும் பக்டீரியாக்கள் உண்ணுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையை சேர்ந்த 74 வயதான தாய் ஒருவர் தனது மகள் மற்றும் அவரது குடும்பத்தினரை சந்திப்பதற்காக கடந்த ஜனவரி மாதம் அவுஸ்திரேலியா சென்றுள்ளார்.

இதன்போது கடுமையான இருமல் மற்றும் ஒரு கை வீங்கி நீல நிறமாக மாறிய நிலையில் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, வைத்தியர்கள் மேற்கொண்ட பரிசோதனையில் முதலில் பக்டீரியாக்கள் அடையாளம் காணப்படவில்லை என்றும் கூறியுள்ளனர்.

இருப்பினும், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால் நீண்ட பரிசோதனையின் பின்னர் பக்டீரியா கண்டுபிடிக்கப்பட்டு, அறுவை சிகிச்சை செய்து அவரது கையை அகற்றியுள்ளதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Share

Recent Posts

தொடர்புடையது
namal rajapaksa
அரசியல்இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றக் கூட்டத்துக்கு நன்றி தெரிவித்த நாமல்: பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் தேவை!

அண்மையில் வீசிய புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்கள் வழங்குவது குறித்து விவாதிப்பதற்காக நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்குப் பிரதமர்...

25 693c8bcce20f5
இலங்கைசெய்திகள்

வெள்ள நிவாரணக் கொடுப்பனவு: மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலையீட்டால் 18 வீடுகளுக்கு ரூ. 25,000 சிபாரிசு!

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் (HRCSL) தலையீட்டையடுத்து, வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட வீட்டைச் சுத்தப்படுத்துவதற்கான 25,000...

25 693cc84b2fa0b
அரசியல்இலங்கைசெய்திகள்

விடுதலைப் புலிகள் காலத்தில் இல்லாத அத்துமீறல்: இந்திய இழுவைப் படகுகளுக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கடும் கண்டனம்!

இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல் செயற்பாடுகளால் வட பகுதி கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக வன்னி மாவட்ட...

25 693cf3ffce4c3
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

விபத்தில் மூளைச்சாவு அடைந்த வவுனியா இளைஞன்; இரண்டு சிறுநீரகங்களைத் தானம் செய்து இரு உயிர்களைக் காப்பாற்றிய நெகிழ்ச்சிச் சம்பவம்!

வவுனியாவில் விபத்தில் சிக்கிய இளைஞர் ஒருவர், தனது இரண்டு சிறுநீரகங்களைத் தானம் செய்ததன் மூலம் இருவரின்...