24 66655557880f0
உலகம்செய்திகள்

தனியொருவராக இதுவரை 110 லிற்றருக்கு மேல் இரத்த தானம் செய்த நபர்

Share

தனியொருவராக இதுவரை 110 லிற்றருக்கு மேல் இரத்த தானம் செய்த நபர்

அமெரிக்காவின் லாங் ஐலேண்டைச் சேர்ந்த ஒருவர் இதுவரை சுமார் 29 கேலன் இரத்த தானம் செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

தற்போது 68 வயதாகும் Henry Bickoff என்பவரே, கடந்த 49 ஆண்டுகளில் சுமார் 29 கேலன் இரத்தம்( தோராயமாக 110 லிற்றர்) தானம் செய்துள்ளார். கடந்த 1975 முதல் இரத்த தானம் செய்து வரும் இவரால், 693 பேர்கள் பயனடைந்துள்ளனர்.

இரத்த தானம் என்பது தாம் உறுதியளித்த ஒன்று எனவும், அதற்கு கொஞ்சம் அங்கீகாரம் கிடைத்திருப்பது உண்மையில் மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் Henry Bickoff குறிப்பிட்டுள்ளார்.

தமது கல்லூரி காலகட்டத்தில் முதல் முறையாக இரத்த தானம் செய்ததாக குறிப்பிடும் அவர், பெரும்பாலானோர் இரத்த தாம் செய்கின்றனர். இது ஒருவகை உலகை காக்க, ஏதேனும் நல்லது அனைவருக்கும் செய்ய வேண்டும் என்ற நிலை என அவர் விளக்கமளித்துள்ளார்.

முதல் தடவை இரத்த தானம் செய்த போது மிகவும் மயக்கமாக உணர்ந்ததாக கூறும் அவர், ஆனால் அது ஒன்றும் தம்மை பயமுருத்தவில்லை என்கிறார். தொடக்கத்தில் ஒவ்வொரு 56 நாட்களுக்கும் ஒருமுறை இரத்த தானம் செய்து வந்ததாக கூறும் அவர், தற்போது வயதின் காரணமாக குறைத்துக்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Henry Bickoff-ன் மனைவி அவ்வப்போது இரத்த தானம் செய்து வந்துள்ளார். ஆனால் அரிய வகை இரத்த நோய் காரணமாக அவரது மகள் இரத்த தானம் செய்வதில்லை. மகனுக்கு இதில் ஆர்வம் இல்லை என்றும் Henry Bickoff தெரிவித்துள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
MediaFile 4 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இன்று மகா சிவராத்திரி! – சிவாலயங்களில் குவியும் பக்தர்கள்; இரவு முழுவதும் விழித்திருந்து வழிபாடு!

ஆன்மீக ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் மிக முக்கியமான தினமாகக் கருதப்படும் மகா சிவராத்திரி விரதம் இன்று...

MediaFile 4 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அக்குரேகொட படுகொலை: கொலையாளிகளின் கார் மீட்பு! – சட்டத்தரணியின் ‘தரப்பு மாற்றம்’ மரணத்திற்கு காரணமா?

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியைப் படுகொலை செய்யப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் கார், காலி...

image 1d03fce287
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உங்கள் கையெழுத்து உங்கள் உரிமையைக் காக்கும்’: PTA-வை நீக்கக் கோரி வடகிழக்கில் ஒரு லட்சம் கையெழுத்துப் போராட்டம்!

சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடைச்சட்டம் (PTA) மற்றும் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட முன்மொழிவுகளை (ATA) முற்றாக...

image 914163dc5e
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பு ஜிந்துபிட்டியில் பயங்கரம்: சிகையலங்கார நிலையத்திற்குள் புகுந்து துப்பாக்கிச் சூடு! 

கொழும்பு, ஜிந்துபிட்டி வரக்கா சந்தி பகுதியிலுள்ள முடியலங்கார நிலையம் (Barber Shop) ஒன்றிற்குள் நேற்றிரவு (14)...