24 6652723aee5bf
உலகம்செய்திகள்

கின்னஸ் சாதனை படைத்த காளை

Share

கின்னஸ் சாதனை படைத்த காளை

உலகம் முழுவதும் பல்வேறு வகைகளில் கின்னஸ் சாதனைகள் இடம்பெற்றுவரும் நிலையில், உலகின் மிக உயரமான காளை என்ற கின்னஸ் சாதனையை அமெரிக்காவில் உள்ள ஒரு காளை படைத்துள்ளது.

அமெரிக்காவின்(America) ஓரிகானில் உள்ள விலங்குகள் சரணாலயத்தில் வசிக்கும் 6 அடி 4.5 அங்குலம் உயரம் கொண்ட ரோமியோ என பெயரிடப்பட்ட காளை ஒன்றே இந்த சாதனையை படைத்துள்ளது.

கின்னஸ் சாதனை அமைப்பின் அறிக்கைபடி, இதற்கு முன்னர் டாமி என்ற காளை இந்த சாதனையில் இடம்பிடித்துள்ளது.

இந்நிலையில், அதைவிட 3 அங்குலம் அதிக உயரத்துடன் தற்போது ரோமியோ காளை புதிய சாதனையை படைத்துள்ளது.

இந்த சாதனை குறித்து காளையின் உரிமையாளரான மிஸ்டி மூர் கூறுகையில்,

“ரோமியோ காளைக்கு வாழைப்பழங்கள் மற்றும் ஆப்பிள் மிகவும் பிடிக்கும். தினமும் 45 கிலோ வைக்கோல் மற்றும் தானியங்கள் உட்கொள்கிறது.

இந்த காளையை வளர்ப்பதற்காகவே தற்போது உயரமான தங்குமிட வசதிகள் தேவைப்படுகிறது” என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
30 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரியாத் மற்றும் டுபாய்க்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கிறது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத் மற்றும் டுபாய்க்கான தினசரி...

29 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சர்வதேச பொருளாதார சவால்களை எதிர்கொள்ள இலங்கை தயார்: மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு...

23 4
செய்திகள்இலங்கை

தமிழக சட்டமன்ற தேர்தல்: தவெக-அதிமுக கூட்டணி குறித்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, நடிகர் விஜய்யின்...

22 7
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அடிப்படை உரிமை மனு: விசாரணை வரும் 13-ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது...