24 664aec6277bcd
உலகம்செய்திகள்

ஈரான் ஜனாதிபதியின் உயிரிழப்பால் மத்திய கிழக்கு நாடுகளில் பிரச்சினைகள் ஏற்படலாம்?

Share

ஈரான் ஜனாதிபதியின் உயிரிழப்பால் மத்திய கிழக்கு நாடுகளில் பிரச்சினைகள் ஏற்படலாம்?

ஈரான் ஜனாதிபதி ஹெலிகொப்டர் விபத்தொன்றில் பலியானதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர் உயிரிழந்தது உண்மையானால், அதனால் மத்திய கிழக்கு நாடுகளில் பாரிய பிரச்சினைகள் ஏற்படலாம் என கருதப்படுகிறது.

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போரில், ஈரான் ஆதரவு போராளிக்குழுக்களான, லெபனானின் ஹிஸ்புல்லா, ஏமனின் ஹவுதிக்கள் முதலான குழுக்களும் தலையிட்டு வருவது அனைவரும் அறிந்ததே.

இப்படிப்பட்ட ஒரு சூழலில், ஈரான் ஜனாதிபதி ஹெலிகொப்டர் விபத்தொன்றில் பலியானதாக வெளியாகியுள்ள தகவல், மத்திய கிழக்கு நாடுகளில் பாரிய பிரச்சினைகளுக்கு வழிவகுக்கக்கூடும் என கருதப்படுகிறது.

ஈரானின் அணு ஆயுத திட்டங்கள் காரணமாக, இஸ்ரேல் ஈரானை தனக்கு ஒரு பெரும் அச்சுறுத்தலாகவே பார்த்துவருகிறது. ஈரானோ, தன்னை பாலஸ்தீனத்தின் புரவலனாக, ஆபத்பாந்தவனாக கருதிக்கொண்டுள்ளது. ஈரான் தலைவர்கள் பலர் பல ஆண்டுகளாக இஸ்ரேலை உலக வரைபடத்திலிருந்தே காணாமல்போகச் செய்யவேண்டுமென சூழுரைத்துவருகிறார்கள்.

ஈரான் ஜனாதிபதியான இப்ராஹிம் ரைசியோ, கடந்த மாதம்கூட, இஸ்ரேல் கடந்த 75 ஆண்டுகளாக பாலஸ்தீன மக்களுக்கெதிராக கொடுமையான அநியாய செயல்களில் ஈடுபட்டுவருகிறது என்றும், ஆகவே முதலாவது அவர்களை அகற்றவேண்டும் என்றும், இரண்டாவது, அவர்களால் ஏற்பட்ட இழப்புகளுக்கு அவர்களை பொறுப்பேற்கச் செய்யவேண்டும் என்றும் மூன்றாவதாக, அவர்களை நீதியின் முன் நிறுத்தவேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இதற்கிடையில், ஏற்கனவே இஸ்ரேல் மூத்த ஈரானிய ராணுவ அதிகாரிகளையும், அணு விஞ்ஞானிகளையும் குறிவைத்து தாக்குதல் நடத்திவருவதாக நம்பப்படுகிறது.

ஈரான் ஜனாதிபதியின் ஹெலிகொப்டர் விபத்துக்கும் இஸ்ரேலுக்கும் தொடர்பு இருப்பதாக ஆதாரங்கள் எதுவும் இதுவரை இல்லை. அத்துடன், இஸ்ரேல் தரப்பு இதுவரை ஹெலிகொப்டர் விபத்து குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவும் இல்லை.

என்றாலும், ஈரான் ஜனாதிபதி ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த விடயம், ஏதேனும் ஒரு தரப்பிலிருந்து விரும்பத்தகாத மோதல்களை உருவாக்கி போரை பெரிதாக்கிவிடக்கூடும் என்ற அச்சம் உருவாகியுள்ளதை மறுப்பதற்கில்லை.

Share

Recent Posts

தொடர்புடையது
images 10
செய்திகள்இந்தியா

டெல்லி செங்கோட்டை கார் வெடிப்பு: பலியானோருக்கு பிரதமர் மோடி இரங்கல் – உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் நிலைமை குறித்து ஆலோசனை!

புதுடெல்லி செங்கோட்டை அருகே கார் வெடித்து 8 பேர் உயிரிழந்த சம்பவத்துக்குப் பிரதமர் நரேந்திர மோடி...

1762783393 Namal Rajapaksa SLFP Sri Lanka Ada Derana 6
செய்திகள்அரசியல்இலங்கை

சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நாமல் ராஜபக்ஷ: 10 ஆண்டுகளுக்குப் பிறகு வருகை – அரசியல் கூட்டம் குறித்துப் பேச்சுவார்த்தை!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தலைமையிலான கட்சியின்...

25 6912189d45e01
இலங்கைசெய்திகள்

வவுனியாவில் ரெலோ ஊடக சந்திப்புப் புறக்கணிப்பு: சர்ச்சைக்குரிய குரல் பதிவு விவகாரம் – நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் உடனடியாக வெளியேற்றம்!

ரெலோ (TELO) கட்சியின் தலைவரும், வன்னி நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் கட்சியின் ஊடகச் சந்திப்பை...

image 3268f37140
பிராந்தியம்இலங்கைசெய்திகள்

மன்னார் காற்றாலைத் திட்ட எதிர்ப்புப் போராட்டம் 100ஆவது நாளை எட்டியது: வாழ்வுரிமைச் சாத்வீகப் போராட்டம் தீப்பந்த எழுச்சிப் போராட்டமாக மாற்றம்!

மன்னார் தீவில் காற்றாலை மின் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் மக்களின் வாழ்வுரிமைச் சாத்வீகப்...