133242527 gettyimages 2149720428
உலகம்செய்திகள்

பிரித்தானியா வேண்டாம்… மீண்டும் பிரான்சுக்கே திரும்பிய புலம்பெயர்ந்தோர்

Share

பிரித்தானியா வேண்டாம்… மீண்டும் பிரான்சுக்கே திரும்பிய புலம்பெயர்ந்தோர்

உயிரைப் பணயம் வைத்து ஆங்கிலக் கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழைந்த புலம்பெயர்ந்தோர் ஒருவர், தன்னை மீண்டும் பிரான்சுக்கே கொண்டு விட்டுவிடுவதற்காக கடத்தல்காரர் ஒருவருக்கு பணம் கொடுத்துள்ளார்.

ஊடகவியலாளர்கள் சிலர், சமீபத்தில், பிரான்சிலிருந்து ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழையமுயலும் புலம்பெயர்ந்தோரைக் காணச்சென்றிருக்கிறார்கள். அப்போது, அங்கு, பிரித்தானியாவிலிருந்து மீண்டும் பிரான்சுக்கே திரும்பிவிட்ட புலம்பெயர்ந்தோர் ஒருவரை அவர்கள் சந்தித்துள்ளார்கள்.

அவரது பெயர் ஓமர். இரண்டு ஆண்டுகளுக்கு முன், கடத்தல்காரர்களுக்கு 12,000 பவுண்டுகள் படகு ஒன்றின் மூலம் ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழைந்துள்ளார் குர்திஸ்தான் நாட்டவரான ஓமர். 20 மாதங்கள் பிரித்தானியாவில் தங்கியிருந்த நிலையில், மீண்டும் ஒரு கடத்தல்காரருக்கு 500 பவுண்டுகள் கொடுத்து, எப்படியாவது தன்னை மீண்டும் பிரான்சுக்கே கொண்டு விட்டுவிடும்படி கையைக் காலைப் பிடித்து படகொன்றில் ஏறி மீண்டும் பிரான்சுக்கே வந்துவிட்டார் அவர்.

பிரித்தானியாவில் புகலிடக்கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படாமல், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு, இதைவிட பிரான்சே பரவாயில்லை என பிரான்சுக்கே திரும்பிவிட்டார் அவர்.

பிரான்சில் வாழ்க்கை கஷ்டம்தான். ஆனால், பிரித்தானியாவில் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை கைரேகையைப் பதிவு செய்யவேண்டும், கையெழுத்திடவேண்டும், இவ்வளவும் ஒழுங்காக செய்துவிட்டு, ஒருநாள் உங்கள் புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டுவிட்டது என்றார்கள் பிரித்தானிய அதிகாரிகள்.

அவர்கள் இனி என்னைக் கைது செய்து ருவாண்டாவுக்கோ அல்லது ஈராக்குக்கோ அனுப்பக்கூடும். என்னால் அங்கெல்லாம் போகமுடியாது, ஆகவே பிரான்சுக்கே வந்துவிட்டேன் என்கிறார் ஓமர்.

Share
தொடர்புடையது
20 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் வீசும் முயற்சி முறியடிப்பு: இளைஞர் ஒருவர் கைது!

காலி சிறைச்சாலையின் பாதுகாப்பை மீறி, அதன் மதிலுக்கு மேலால் போதைப்பொருள் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்களை உள்ளே...

19 16
செய்திகள்விளையாட்டு

92 ஆவது “புனிதர்களின் சமர்” கிரிக்கெட் போட்டி: வெற்றியின்றிச் சமநிலையில் நிறைவு!

கொழும்பு புனித ஜோசப் கல்லூரி மற்றும் பம்பலப்பிட்டி புனித பீட்டர்ஸ் கல்லூரி அணிகளுக்கு இடையிலான வரலாற்றுச்...

18 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நெலுவ மாதுகெட்ட பகுதியில் கிங் கங்கையில் சடலம் மீட்பு: பொலிஸார் விசாரணை!

காலி மாவட்டம், நெலுவ – மாதுகெட்ட பகுதியில் பாயும் கிங் கங்கையில் (Gin Ganga) மிதந்தவாறு...

17 18
செய்திகள்உலகம்

ஈரானின் நடன்ஸ் அணுசக்தி நிலையம் மீது மீண்டும் தாக்குதல்: சர்வதேச விதிகள் மீறப்பட்டுள்ளதாக ஈரான் குற்றச்சாட்டு!

ஈரானின் மிக முக்கியமான மற்றும் பிரதான அணுசக்தி நிலையங்களில் ஒன்றான நடன்ஸ் (Natanz) மீது மீண்டும்...