24 663331f956207
உலகம்செய்திகள்

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பின் தாக்கம்: மூடப்பட்ட விமான நிலையங்கள்

Share

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பின் தாக்கம்: மூடப்பட்ட விமான நிலையங்கள்

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு காரணமாக அந்த நாட்டின் 7 சர்வதேச விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி மாகாணத்தில் உள்ள ருயாங் தீவில் உள்ள எரிமலை ஒன்று கடந்த மாதம் கரும்புகையை கக்கியபடி வெடித்து சிதறத் தொடங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.

பின்னர் அமைதியாகிய நிலையில் மீண்டும் கடந்த சில நாட்களாக அந்த எரிமலை வெடித்து சிதறத் தொடங்கியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த தீவில் உள்ள எரிமலை அடிவார குடியிருப்புகளில் வசித்து வந்த 12 ஆயிரம் பொதுமக்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து கண்காணித்து வரும்நிலையில் அதன் தாக்கம் அதிகமாக இருக்கின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனையடுத்து அங்குள்ள கல்வி நிறுவனங்களான பாடசாலைகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.

மேலும் சுற்றுலாப் பயணிகளின் வருகையை தவிர்க்கும் வகையில் சர்வதேச விமான நிலையமான சாம் ரதுலங்கி உட்பட 7 விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
500x300 23304852 4 fog
செய்திகள்விளையாட்டு

இந்தியா – தென்னாப்பிரிக்கா 4-வது டி20 போட்டி ரத்து: லக்னோவில் கடும் பனியால் பாதிப்பு!

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில்...

MediaFile 5 3
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கொத்மலை – இறம்பொடை மண்சரிவு: பெண்ணொருவருடையது என சந்தேகிக்கப்படும் உடல் பாகம் மீட்பு!

கொத்மலை – இறம்பொடை பகுதியில் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சிக்கிக் காணாமல் போனவர்களில் ஒரு பெண்ணுடையது...

23 658fd712815b0
இலங்கைசெய்திகள்

பேருந்து – முச்சக்கர வண்டி மோதிய விபத்தில் தாய் மற்றும் இரண்டு வயது குழந்தை பலி!

தெஹியத்தகண்டிய, முவகம்மன பகுதியில் இன்று (17) பிற்பகல் இடம்பெற்ற கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த...

MediaFile 796x445 1
இலங்கைசெய்திகள்

பாதுகாப்பு அச்சுறுத்தல்: அநுராதபுரம் போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் திடீர் பணிப்புறக்கணிப்பு!

வைத்தியசாலை வளாகத்தில் தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து, தமக்கு உரிய பாதுகாப்பு இல்லை எனக் கூறி...