24 6629d6203e821
உலகம்செய்திகள்

காசாவின் வெகுஜன புதைகுழிகள் குறித்து விசாரணைக்கு அழைப்பு

Share

காசாவின் வெகுஜன புதைகுழிகள் குறித்து விசாரணைக்கு அழைப்பு

இஸ்ரேலிய (Israel) துருப்புக்களின் தாக்குதலின் பின்னர், காசாவின் (Gaza) இரண்டு பெரிய மருத்துவமனைகளில் கண்டுபிடிக்கப்பட்ட வெகுஜன புதைகுழிகள் குறித்து தெளிவான, வெளிப்படையான மற்றும் நம்பகமான விசாரணைக்கு ஐக்கிய நாடுகள் சபை (United Nations) அழைப்பு விடுத்துள்ளது.

இந்த விடயத்தில் நம்பகமான புலனாய்வாளர்கள் தளங்களை அணுக வேண்டும் என்று ஐக்கிய நாடுகளின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்,

உண்மைகளை கண்டறிய காசாவில் அதிகமான ஊடகவியலாளர்கள் பணியாற்ற முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் தலைவர் வோல்கர் டர்க் (Volker Türk), காசா நகரில் உள்ள ஷிஃபா மருத்துவ மையம் மற்றும் தெற்கு நகரமான கான் யூனிஸில் உள்ள நாசர் மருத்துவமனை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாரிய புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டதைக் கண்டு தான் திகிலடைந்துள்ளதாக கூறியிருந்தார்.

மரணங்கள் தொடர்பாக சுதந்திரமான மற்றும் வெளிப்படையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார்,

அத்துடன், தற்போது நிலவும் தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கப்படும் சூழலைக் கருத்தில் கொண்டு இதில் சர்வதேச புலனாய்வாளர்களும் இருக்க வேண்டும் என்று வோல்கர் வலியுறுத்தியுள்ளார்.

போரில் ஈடுபடும் திறன் இல்லாத பொதுமக்கள், கைதிகள் மற்றும் பிறரை வேண்டுமென்றே கொலை செய்வது ஒரு போர்க் குற்றமாகும் என்று குற்றம் சுமத்தியுள்ளார்.

மேலும், அமெரிக்க வெளியுறவுத் துறை பேச்சாளர் வேதாந்த் படேல், வெகுஜன புதைகுழிகள் தொடர்பில் அமெரிக்க அதிகாரிகள் இஸ்ரேலிய அரசாங்கத்திடம் தகவல் கேட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 21 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஏப்ரல் முதல் வாகனங்களுக்குப் புதிய வரி! – அவசரப்பட்டு வாகனங்களை வாங்க வேண்டாம் என இறக்குமதியாளர்கள் சங்கம் கோரிக்கை!

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு எதிர்வரும் ஏப்ரல் 1, 2026 முதல் 2.5 சதவீத சமூக...

image 1200x800 20 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வைத்தியர் சத்தியமூர்த்தி அதிரடி முறைப்பாடு! – மக்கள் எழுச்சி கட்சி நிறுவனருக்கு எதிராகப் பொலிஸார் விசாரணை!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி அவர்கள், அகில இலங்கை மக்கள் எழுச்சி...

image 1200x800 19 2
செய்திகள்இந்தியா

இஸ்ரேல் செல்லும் பிரதமர் மோடி! – 56 இராணுவ நிறுவனங்களுக்கு இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தங்கள் கையெழுத்து!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரும் பிப்ரவரி 25-ஆம் திகதி இஸ்ரேலுக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ...

001
செய்திகள்அரசியல்இலங்கை

சிஐடி-யில் ஆஜராகிறார் பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க! – நிதி துஷ்பிரயோக வழக்கில் பரபரப்பு விசாரணை!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நிதி முறைகேடு தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, அவரது...