24 6628dcfe1621a 1
உலகம்செய்திகள்

லண்டனைத் தாக்க 20 நிமிடங்கள்தான்… அணு ஏவுகணை தொடர்பில் மிரட்டல் விடுத்த புடின்

Share

லண்டனைத் தாக்க 20 நிமிடங்கள்தான்… அணு ஏவுகணை தொடர்பில் மிரட்டல் விடுத்த புடின்

அணு ஆயுதங்கள் இருப்பதே பயன்படுத்துவதற்காகத்தான் என்று கூறி, அணு ஆயுதங்கள் தொடர்பில் மறைமுகமாக மிரட்டல் விடுத்துள்ளார் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின்.

உக்ரைனை ஊடுருவியதிலிருந்தே, உக்ரைனுக்கு ஆதரவு தெரிவிக்கும் நாடுகளுக்கு மிரட்டல் விடுத்துவரும் புடின், அணு ஆயுதங்கள் இருப்பதே பயன்படுத்துவதற்காகத்தான் என்று கூறி, அணு ஆயுதங்கள் தொடர்பில் மறைமுகமாக கடந்த மாதம் மிரட்டல் விடுத்தார்.

எங்கள் நாட்டின் இறையாண்மைக்கு ஆபத்து ஏற்படும் நிலையில், அணு ஆயுதங்கள் உட்பட எந்த ஆயுதங்களையும் பயன்படுத்த நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று கூறியுள்ளார் அவர்.

இந்நிலையில், அமெரிக்க அறிவியலாளர்களின் ஆய்வமைப்பு ஒன்று, ரஷ்யாவிடம் 5,977 அணு ஆயுதங்கள் இருப்பதாகவும், புடின் தான் மிரட்டியதை செய்யக்கூடியவர்தான் என்றும் தெரிவித்துள்ளது.

ரஷ்யாவிடம் இருக்கும் கண்டன் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள், மற்ற நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாகும். அப்படி ரஷ்யாவிலிருந்து அந்த ஏவுகணைகள் பிரித்தானியாவை நோக்கி ஏவப்படும் நிலையில், அவை 20 நிமிடங்களில் லண்டனைத் தாக்கும் என்கிறார்கள் நிபுணர்கள்.

மேலும், ரஷ்யாவிலிருந்து அமெரிக்காவை நோக்கி வீசப்படும் ஏவுகணைகள், 30 நிமிடங்களில் அமெரிக்காவைச் சென்றடைந்துவிடுமாம்!

Share
தொடர்புடையது
20 12
செய்திகள்இந்தியா

இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர்: ஆகஸ்ட் மாதம் நிவாரண நிதி திரட்டும் போட்டிகள்!

கடந்த நவம்பர் மாதம் இலங்கையைத் தாக்கிய ‘டித்வா’ (Ditwah) சூறாவளியால் ஏற்பட்ட பெரும் பாதிப்புகளிலிருந்து மீண்டு...

19 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி: இன்றைய நிலவரம்!

இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தின் தரவுகளின்படி, கடந்த சில நாட்களாக நிலவிய ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில்,...

17 12
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு மோதலால் உலகளவில் உயரும் விமான எரிபொருள் விலை: விமானப் பயணச்சீட்டுகளின் விலையில் நேரடி தாக்கம்!

மத்திய கிழக்கில் தற்போது நிலவும் போர்ச் சூழல் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை...

16 12
உலகம்செய்திகள்

ஈராக்கில் ஆளில்லா வானூர்தி தாக்குதல்: பிரான்ஸ் இராணுவ அதிகாரி உயிரிழப்பு, ஜனாதிபதி மக்ரோன் கண்டனம்!

ஈராக்கின் எர்பில் (Erbil) பிராந்தியத்தில் அமைந்துள்ள கூட்டு இராணுவத் தளத்தின் மீது நடத்தப்பட்ட ஆளில்லா வானூர்தி...