24 661a3e078569b
உலகம்செய்திகள்

ஐ.எம்.எப் பணிப்பாளராக கிறிஸ்டலினா ஜோர்ஜீவா

Share

ஐ.எம்.எப் பணிப்பாளராக கிறிஸ்டலினா ஜோர்ஜீவா

2024ஆம் ஆண்டிற்கான சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவ பணிப்பாளராக கிறிஸ்டலினா ஜோர்ஜீவா (Kristalina Georgieva) இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

நேற்று (12) இடம்பெற்ற செயற்குழுவின் ஏகோபித்த முடிவின்படி, இந்த ஆண்டு ஒக்டோபர் 01ஆம் திகதி முதல் ஐந்தாண்டு காலத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள ஒரே வேட்பாளர் இவர் என்பதோடு இந்த நியமனத்தை வழங்குவதற்கு முன்னர் ஜோர்ஜீவாவுடன் பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும் சர்வதேச நாணய நிதியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், பல்கேரிய நாட்டைச் சேர்ந்த ஜோர்ஜீவா, 2019 ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளராக இருந்து வந்துள்ள நிலையில் இதற்கு முன் 2017ஆம் ஆண்டு ஜனவரி முதல் உலக வங்கியின் (World Bank) தலைமை நிர்வாக அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார்.

Share
தொடர்புடையது
10 18
உலகம்செய்திகள்

காசாவில் கடும் பஞ்சம்: ஐ.நா சபை எச்சரிக்கை

காசாவில் உள்ள மக்கள் தற்போது கடும் பஞ்சத்தை எதிர்நோக்கியுள்ளதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக...

8 18
இலங்கைசெய்திகள்

சாட்டையைக் கையில் எடுத்துள்ள ஜனாதிபதி! அமைச்சர்கள் சிலருக்கு கட்டுப்பாடு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலர் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடுமையான அதிருப்தி...

9 18
இலங்கைசெய்திகள்

மாணவியை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் கைது

மாணவி ஒருவரை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். தெவினுவர பிரதேசத்தைச்...

7 18
உலகம்செய்திகள்

கூகுள் நிறுவனத்திற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

கூகுள் நிறுவனத்திற்கு அமெரிக்க நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, 1.4 பில்லியன் டொலர் அபராதம்...