24 6611f42c85711
உலகம்செய்திகள்

தைவானை அதிர வைத்த நிலநடுக்கம்: பகீர் தகவல்கள்

Share

தைவானை அதிர வைத்த நிலநடுக்கம்: பகீர் தகவல்கள்

தைவானில் ஏற்பட்ட 7.4 ரிக்டா் அளவிலான நிலநடுக்கத்தினால் இடிந்து விழுந்த கட்டட இடிபாடுகளில் மேலும் சுமாா் 600 போ் சிக்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்படி, டரோக்கா பாா்க் பகுதியிலுள்ள ஒரு ஹோட்டலின் இடிபாடுகளுக்குள் மட்டும் சுமாா் 450 போ் இருப்பதாக எதிர்பார்க்கபடுகிறது.

அதேவேளை, இந்த நிலநடுக்கத்தின் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்வதாக கூறப்படுகிறது.

கடந்த புதன்கிழமை தைவானின் தெற்குக் கடலோர நகரான ஹுவாலியனுக்கு சுமாா் 18 கி.மீ. தொலைவில் பாரிய நிலநடுக்கமொன்று ஏற்பட்டது.

கடந்த 25 ஆண்டுகளில் தைவான் சந்தித்திராத மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் என்பதுடன் அது ரிக்டா் அளவுகோலில் 7.4 அலகுகளாக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
images 10 4
செய்திகள்இலங்கை

தனியார் துறை ஊழியர்களுக்கும் ஓய்வூதியம்? அரசாங்கம் புதிய திட்டம் குறித்து ஆலோசனை!

தனியார் துறை ஊழியர்களின் எதிர்கால நலனைக் கருத்திற்கொண்டு அவர்களுக்குப் புதிய ஓய்வூதியத் திட்டமொன்றை (Pension Scheme)...

sajith
செய்திகள்இலங்கை

நாடாளுமன்றத்தில் பரபரப்பு: பெண் ஊழியர் துன்புறுத்தல் அறிக்கை ஏன் மறைக்கப்படுகிறது? சஜித் பிரேமதாச கேள்வி!

நாடாளுமன்ற பெண் ஊழியர்கள் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான விசாரணை அறிக்கை, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படாமல்...

செய்திகள்இலங்கை

இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு இறுதிக்கட்டத்தில்! ஊழியர்களின் நலன்களுக்கு முக்கியத்துவம் என அறிவிப்பு!

நாட்டின் எதிர்கால மின்சாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் திட்டமிடப்பட்டுள்ள இலங்கை மின்சார சபையின் (CEB)...

96b6d210 5408 11ef b8c3 f76c0a5f70a8.jpg
செய்திகள்உலகம்

யுனுஸின் ஆட்சி சட்டவிரோதமானது! – இந்தியாவிலிருந்து ஷேக் ஹசீனா விடுத்த முதல் பகிரங்க அறிக்கை!

கடந்த 2024-ஆம் ஆண்டு பங்களாதேஷில் ஏற்பட்ட மக்கள் புரட்சியைத் தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில்...