24 660cbfd57f2da
உலகம்செய்திகள்

பூமியின் மேற்பரப்பிற்கு அடியில் உள்ள இரகசியத்தை கண்டறிந்த விஞ்ஞானிகள்

Share

பூமியின் மேற்பரப்பிற்கு அடியில் உள்ள இரகசியத்தை கண்டறிந்த விஞ்ஞானிகள்

பூமியில் கால அளவீட்டில் ஏற்படவுள்ள மாற்றம் கண்டறியப்பட்ட காலகட்டத்தில் பூமியின் மேற்பரப்பிற்கு அடியில் ஒரு பெரிய கடல் போன்ற அமைப்பை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

அவுஸ்திரேலியாவில் கண்டெடுக்கப்பட்ட இந்த அமைப்பு கடல் இல்லை என்றும் அது மிகப்பெரிய பள்ளம் என்றும் ஆய்வாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

இந்தப் பள்ளம் ஒரு சிறுகோள் அளவிற்கு காணப்படுவதாகவும், பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் பூமியில் விழுந்த ஒரு விண்கல்லினால் இந்தப் பள்ளம் உருவாகியிருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

இந்தப் பள்ளமானது சுமார் 320 மைல் விட்டத்தை கொண்டது என்றும், இதே போன்ற ஒரு அமைப்பை கொண்ட ஒரு பள்ளம் தென் ஆபிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ளது என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஆனால் அது 100 மைல் விட்டத்தையே கொண்டுள்ளது இந்தப் பள்ளமும் பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் பூமியை மோதிய விண்கல்லின் விளைவால் நேர்ந்ததாக கூறப்படுகிறது, இதே போன்ற இன்னொரு அமைப்பு மெக்ஸிக்கோவிலும் கண்டறியப்பட்டுள்ளது அதுவும் விண்கல் பூமியை மோதிய கணத்தில் தோன்றிய பள்ளம் என்றே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மற்றைய இரண்டு பள்ளங்களை காட்டிலும் அவுஸ்திரேலியாவிலுள்ள இந்த பள்ளம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது அது விண்கல் வீழ்ந்தால் உருவான இரண்டாவது மிகப்பெரிய பள்ளம் என்றும் குறிப்பிடபட்டுள்ளது.

ஏனென்றால் டைனோசர்களின் அழிவுக்கு காரணமான சிறுகோள் விழுந்த இடம் இதுவாக இருக்கலாம் என்றும், இந்த இடத்தில் பூமியின் மேற்பரப்பிற்கு அடியில் ஒரு பெரிய கடலே உருவாகியுள்ளதாகவும் விஞ்ஞானிகள் கணித்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Share

Recent Posts

தொடர்புடையது
1722136783 24 664a5be3012cc
செய்திகள்இலங்கை

நாடளாவிய ரீதியில் நீதிமன்றங்கள் முடக்கம்! – 3,500 சட்டத்தரணிகள் பங்கேற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டம்; அரசாங்கத்திற்கு கடும் எச்சரிக்கை!

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் மிலேச்சத்தனமாகச் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில்,...

image 1200x800 7
செய்திகள்இந்தியா

இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்குக! – பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவசரக் கடிதம்!

தமிழ்நாட்டிலுள்ள முகாம்களிலும், வெளியேயும் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக்...

image 1200x800 6
உலகம்செய்திகள்

அமெரிக்கா எங்களை வற்புறுத்துகிறது! – முனிச் மாநாட்டில் ட்ரம்ப் நிர்வாகம் மீது ஜெலன்ஸ்கி பகிரங்கக் குற்றச்சாட்டு!

ஜெர்மனியின் முனிச் நகரில் நடைபெற்று வரும் சர்வதேச பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றிய உக்ரைன் அதிபர் வோலோடிமிர்...

image 1200x800 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பண்டாரவளை கற்குவாரி அனர்த்தம்: இராணுவத்தின் தீவிர தேடுதலில் இரு சடலங்கள் மீட்பு!

பண்டாரவளை, லியன்கஹவெல பகுதியில் உள்ள கற்குவாரி ஒன்றில் கடந்த 14-ஆம் திகதி ஏற்பட்ட பாரிய அனர்த்தத்தில்...