24 6608d3f2c8bd5
உலகம்செய்திகள்

கமீலாவுடன் நெருக்கம் காட்டும் வில்லியம்! ஹரி மனம் உடைவது ஏன்?

Share

கமீலாவுடன் நெருக்கம் காட்டும் வில்லியம்! ஹரி மனம் உடைவது ஏன்?

பிரித்தானிய ராணி கமீலாவுடனான இளவரசர் வில்லியமின் உறவு அதிகரிப்பது இளவரசர் ஹரிக்கு கவலையை ஏற்படுத்தி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரித்தானிய ராணி கமீலாவுடன் தனது சகோதரர் இளவரசர் வில்லியம் நெருக்கமாக பழகுவதை இளவரசர் ஹரி-யால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸ் மற்றும் வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் இருவருக்கும் புற்றுநோய் பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்ட செய்தி அடுத்தடுத்து வெளியானது.

இதன் காரணமாக ராஜாங்க வேலைகளில் இருவரின் தோன்றுதலும் தற்போது முடங்கியுள்ளது.

இருவரும் சிகிச்சைகளுக்கு தயாராகி வரும் நிலையில், ராஜாங்க பணிகளை இளவரசர் வில்லியமும், ராணி கமீலாவும் இணைந்து கவனித்து வருகின்றனர்.

இந்நிலையில், இளவரசர் ஹரிக்கு, தனது சகோதரர் இளவரசர் வில்லியம் ராணி கமீலாவுடன் நெருக்கமாக பழகுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு காரணம் பால்ய கால உணர்வுகள் தீர்க்கப்படாமல் இருப்பதாக அரச குடும்ப விவரம் அறிந்தவர்களான Tom Quinn கருத்து தெரிவித்துள்ளார்.

மிரர் பத்திரிகையிடம் பேசிய Tom Quinn, வில்லியம் கமீலாவுடன் நன்றாக பழகுவதை ஹரி உண்மையிலேயே நம்ப மறுக்கிறார் – ஹரி இதை ஒரு துரோகம் (betrayal) ஆக கருதுவார்” என்று தெரிவித்துள்ளார்.

தங்கள் பெற்றோரின் திருமணத்தில் ஏற்பட்ட விரிசலுக்கு கமீலா தான் காரணம் என்று இளவரசர்கள் சிறு வயதில் நம்பியிருந்ததாக அவர் தெரிவிக்கின்றார்.

வில்லியம் கமீலாவுடன் நேர்மறையான உறவை வளர்த்துக் கொண்டுள்ள நிலையில், ஹரி இன்னும் பழைய காயங்களுடன் போராடிக் கொண்டிருக்கலாம்.

இது அரச குடும்ப நிபுணரின் கருத்தை அடிப்படையாகக் கொண்ட தகவல் ஆகும், இது இளவரசர்களிடமிருந்து பெறப்பட்ட அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் அல்ல.

Share
தொடர்புடையது
world 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லம்பிட்டியில் 4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு: இருவர் கைது

கொழும்பு, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (PNB) நேற்று (மே...

world 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் பிடிபட்ட 74 வியட்நாமியர்களுக்கு மே 14 வரை விளக்கமறியல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள உத்தராநந்த மாவத்தையில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் வைத்து, இணையவழி...

world 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்துப் பதவி விலகிய NPP உறுப்பினர்: ராஜினாமா கடிதம் கசிந்த விவகாரத்தில் சர்ச்சை

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திரா, தனது...

world 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோல் புற்றுநோய் அபாயம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவதானம் தேவை

இலங்கையில் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது....