அமெரிக்காவில் கத்திக்குத்து சம்பவத்தில் நால்வர் பலி
அமெரிக்காவின் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் ஏழு பேர் காயமடைந்துள்ளதோடு அதில் ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த சம்பவத்தில் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என அந்நாட்டு பொலிஸார் கூறியுள்ளனர்.
முதலில் மருத்துவ உதவியை கோரி அழைப்புகள் வந்ததாகவும் பின்னர் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அவசர அழைப்பின் பின்னர் குறித்த பகுதிக்கு பொலிஸார் சென்றவேளை மூவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாகவும் காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார் எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் படுகொலைக்கான காரணம் இதுவரை தெளிவாக தெரியவில்லை என பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளனர்.