உலகம்செய்திகள்

ரஷ்யாவையே அதிர வைத்த தாக்குதல்..’தேசிய துக்க தினம்’ என அறிவித்த புடின்

24 65ff36354be1c
Share

ரஷ்யாவையே அதிர வைத்த தாக்குதல்..’தேசிய துக்க தினம்’ என அறிவித்த புடின்

மாஸ்கோவில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் இறப்பு எண்ணிக்கை 133 ஆக உயர்ந்துள்ளது.

ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் உள்ள கச்சேரி அரங்கில் நடத்தப்பட்ட தாக்குதல் நாட்டையே நடுங்க வைத்தது.

இச்சம்பவத்தில் 40 பேர் கொல்லப்பட்டதாக முதலில் தெரிய வந்தது. அதன் பின்னர் பலி எண்ணிக்கை 120 ஆக உயர்ந்தது.

இந்த நிலையில் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 133 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இதுதொடர்பில் கைது செய்யப்பட்ட 11 பேரில், நான்கு சந்தேக நபர்கள் வெளிநாட்டு குடிமக்கள் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Krasnogorsk-வில் உள்ள ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் இச்சம்பவத்தை ”கொடூரமான மற்றும் கோழைத்தனமான பயங்கரவாத தாக்குதல்” என கடுமையாக கண்டித்தது.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) தனது உரையில், கொடூர சம்பவத்தை ”காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாத செயல்” என்று குறிப்பிட்டதுடன், ‘தேசிய துக்க தினம்’ என அறிவித்துள்ளார்.

இதற்கிடையில் துணைப் பிரதமர் டாட்டியானா கோலிகோவா (Tatyana Golikova) கூறுகையில், மருத்துவ நிறுவனங்களில் 107 நோயாளிகள் உள்ளனர். அவர்களில் 3 குழந்தைகள், அதில் ஒரு குழந்தை மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது என்றார்.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...