24 65fe2759be383
உலகம்செய்திகள்

கனேடிய மக்களுக்கு வெளியான எச்சரிக்கை: அதிகரிக்கும் பனிப்புயல்

Share

கனேடிய மக்களுக்கு வெளியான எச்சரிக்கை: அதிகரிக்கும் பனிப்புயல்

கனடாவில் தற்போது நிலவிவரும் பனிப்புயல் மற்றும் பனிப்பொழிவானது மேலும் வலுவடையும் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன் காரணமாக அந்நாட்டின் டொராண்டோ பகுதி உள்ளிட்ட பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பில், 50 சென்டிமீட்டர் வரை பனிப்பொழிவு காணப்படும் எனவும், பெப்ரவரி மாதத்தில் பதிவுசெய்யப்பட்ட 6.4 சென்டிமீட்டர் என்ற அளவிலும் காட்டிலும் அதிகம் என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் “இன்று மதியம் அல்லது மாலையில் பனி பொலிவானது தீவிரமடையும்” என்று கனடாவின் சுற்றுச்சூழல் மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடுமையான பனிப்பொழிவு காரணமாக, வாகன சாரதிகள் அவதானமாக செயற்படுமாறும் கூறப்பட்டுள்ளது . கனடாவின் பிரதான நகரங்கள் உள்ளிட்ட அதனை சுற்றியுள்ள நகராட்சி பகுதிகளில் 10 சென்டிமீட்டர் வரை பனி பொழியும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், தற்போது டொராண்டோவில் உள்ள பெரிய ஏரிகள் மற்றும் பிற இடங்களில் 50 சென்டிமீட்டர்வரை பனிப்பொழிவு காணப்படும் என கூறப்பட்டுள்ளது.

எனினும் டொராண்டோ மற்றும் ஒட்டாவா போன்ற நகரங்களில் அடுத்த வாரமளவில் மிதமான வெப்பநிலை ஏற்படும் என கூறப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....