Connect with us

உலகம்

கனடாவில் 6 இலங்கையர்கள் கொல்லப்பட்ட சம்பவம்: வெளியான புதிய தகவல்!

Published

on

tamilni 333 scaled

கனடாவில் 6 இலங்கையர்கள் கொல்லப்பட்ட சம்பவம்: வெளியான புதிய தகவல்!

கனடாவின் ஒட்டாவா நகரில் இலங்கையை சேர்ந்த 6 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில் உயிர் தப்பிய கணவர் தனுஷ்க விக்கிரமசிங்க தற்போது குணமடைந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கனடாவின் ஒட்டாவா மாகாணத்தில் கடந்த வார புதன்கிழமை இரவு நடந்த பயங்கர சம்பவத்தில் இலங்கையர் தர்ஷனி டிலந்திகா ஏகநாயக(Darshani Ekanyake (35)) மற்றும் இவரது நான்கு பிள்ளைகளான இனுக விக்ரமசிங்க (7), அஷ்வினி விக்கிரமசிங்க (4), ரினியானா விக்ரமசிங்க (2), கெல்லி விக்கிரமசிங்க (2 மாதம்) ஆகியோர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் இலங்கையில் இருந்து 2 மாதங்களுக்கு முன்பு வந்து, தனுஷ்க விக்கிரமசிங்க குடும்பத்துடன் தங்கியிருந்த மற்றொரு இலங்கையர் அமரகூன் முதங்பியயான்சேல ஜீ காமினி அமரகோன்(Gamini Amarakoon Amarakoon Mudiyanselage, 40) என்பவரும் கொல்லப்பட்டார்.

இந்த தாக்குதல் சம்பவத்தில் தர்ஷினியின் கணவரான தனுஷ்க விக்கிரமசிங்க(Dhanushka Wickramasinghe) அதிர்ஷ்டவசமாக பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இலங்கையை சேர்ந்த 19 வயதான ஃபெப்ரியோ டி ஸோய்சா என்பவரே இந்த கொடூர தாக்குதல் சம்பவத்தை அரங்கேற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.// அவர் மீது தற்போது முதல் நிலை கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு பொலிஸார் தற்போது அவரை விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த பாதிக்கப்பட்ட குடும்பத்தின் தலைவர் தனுஷ்க விக்ரமசிங்க தற்போது குணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால், அவர் இந்த பயங்கர சம்பவத்தின் அதிர்ச்சியில் இருந்து வெளியே வர பல ஆண்டுகள் ஆகும் என கனேடிய பௌத்த பேரவையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் உயிரிழந்தவர்களின் இறுதிச் சடங்கு நாளை(17ம் திகதி) பிற்பகல் ஒட்டாவாவில் நடைபெறும் என்றும், அஞ்சலி செலுத்த வருபவர்கள் தங்கள் இரங்கல் குறிப்புகளை எழுதி வைக்க சந்தர்ப்பம் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இறுதிச் சடங்கில் தனுஷ்க விக்ரமசிங்கவும் கலந்து கொள்வார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இந்த துயரமான நேரத்தில் ஆதரவு அளித்த ஒட்டாவா மக்கள், கனேடியர்கள், இலங்கையர்கள் அனைவருக்கும் தனுஷ்க விக்ரமசிங்க நன்றி தெரிவித்துள்ளார்.

 

Advertisement

ஜோதிடம்

Rasi Palan new cmp 15 Rasi Palan new cmp 15
ஜோதிடம்16 மணத்தியாலங்கள் ago

​இன்றைய ராசி பலன் 28.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 28.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் ஏப்ரல் 28, 2024, குரோதி வருடம் 15,...

tamilnaadi 5 tamilnaadi 5
ஜோதிடம்2 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 27.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 27.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் ஏப்ரல் 27, 2024, குரோதி வருடம் சித்திரை...

Rasi Palan new cmp 14 Rasi Palan new cmp 14
ஜோதிடம்3 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 26.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 26.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் ஏப்ரல் 26, 2024, குரோதி வருடம் சித்திரை...

Rasi Palan new cmp 13 Rasi Palan new cmp 13
ஜோதிடம்4 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 25.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 25.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan நாளின் தொடக்கத்தில் நாம் நாளுக்குரிய ராசிபலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல்...

Rasi Palan new cmp 12 Rasi Palan new cmp 12
ஜோதிடம்5 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 24.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 24.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் ஏப்ரல் 24, 2024, குரோதி வருடம் சித்திரை...

Rasi Palan new cmp 11 Rasi Palan new cmp 11
ஜோதிடம்6 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 23.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 23.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan\ இன்றைய ராசிபலன் ஏப்ரல் 23, 2024, குரோதி வருடம் சித்திரை...

indraya rasipalan 2 indraya rasipalan 2
ஜோதிடம்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 21 ஏப்ரல் 2024 – Today Rasi palan

இன்றைய ராசிபலன் – 21 ஏப்ரல் 2024 – Today Rasi palan மேஷம்   மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மன உறுதியான நாளாக இருக்கும்....