tamilni 159 scaled
உலகம்செய்திகள்

ரஷ்யாவின் ரகசிய படுகொலை திட்டம்! மயிரிழையில் உயிர்தப்பிய ஜெலென்ஸ்கி

Share

ரஷ்யாவின் ரகசிய படுகொலை திட்டம்! மயிரிழையில் உயிர்தப்பிய ஜெலென்ஸ்கி

கருங்கடல் துறைமுகமான ஒடெசாவுக்கு பயணம் மேற்கொண்ட உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, ரஷ்யாவின் படுகொலை திட்டத்தில் இருந்து உயிர் தப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைன் அதிபரின் வாகன அணிவகுப்பு அருகே ரஷ்ய ஏவுகணை தாக்கிய நிலையில், பலர் கொல்லப்பட்டுள்ளதுடன் காயங்களுடன் தப்பியதாகவும் ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.

குறித்த தாக்குதலானது, கிரேக்க பிரதமர் Kyriakos Mitsotakis என்பவருடன் ஜெலென்ஸ்கி பயணப்பட்ட வாகன அணிவகுப்பை இலக்கு வைத்தே முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஜெலென்ஸ்கி மற்றும் கிரேக்க பிரதமர் பயணப்பட்ட வாகனத்திற்கு சுமார் 500 முதல் 800 மீற்றர் தொலைவிலேயே ரஷ்ய ஏவுகணை தாக்கியுள்ளது.

இதில் பாதுகாப்பு வீரர்கள் ஐவர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தாக்குதல் சம்பவத்தை அடுத்து, பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய ஜெலென்ஸ்கி, நாங்கள் யாரை எதிர்கொள்கிறோம் என்பதை பார்த்தீர்களா? எப்போது எங்கே என்ன நடக்கும் என்பதை எதிர்பார்க்க முடியாது என தெரிவித்துள்ளார்.

நடந்த சம்பவத்தை கிரேக்க பிரதமரும் கண்கூடாக பார்த்துள்ளார். இராணுவ அணிவகுப்பா அல்லது பொதுமக்களா, சர்வதேச விருந்தினர்களா என்பது குறித்து அவர்கள் கவலை கொள்வதில்லை என்றும் ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.

தாமதப்படுத்தாமல் மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவிகளை முன்னெடுக்க வேண்டும் என்றே தாம் கோரிக்கை வைப்பதாகவும் ஜெலென்ஸ்கி மீண்டும் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, ஒடெசா துறைமுகத்தின் தேவை மற்றும் முக்கியத்துவம் குறித்து ஜெலென்ஸ்கியும் அவரது அதிகாரிகள் தரப்பும் தமக்கு விளக்கமளித்துள்ளதாக கிரேக்க பிரதமர் Kyriakos Mitsotakis தெரிவித்துள்ளார்.

மேலும், உண்மையில் இந்தப் போர் அனைவரையும் பாதிக்கிறது என்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம் என்வும் Kyriakos Mitsotakis குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...