10 2 scaled
உலகம்செய்திகள்

பாடசாலையில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி குடியிருப்பில் சடலமாக மீட்பு: பிரித்தானியாவில் சம்பவம்

Share

பாடசாலையில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி குடியிருப்பில் சடலமாக மீட்பு: பிரித்தானியாவில் சம்பவம்

பிரித்தானியாவில், பாடசாலையில் விளையாடிவிட்டு குடியிருப்புக்கு திரும்பிய 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சிறுமி தொடர்பில் கைதான பெண்மணி உள்ளிட்ட முக்கிய தகவல்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. Rowley Regis பகுதியில் உள்ள குடியிருப்பில் இருந்து 10 வயதேயான Shay Kang நேற்று குற்றுயிராக மீட்கப்பட்டார்.

மருத்துவ உதவிக் குழுவினர் தங்களால் இயன்ற அனைத்து முயற்சிகளும் முன்னெடுத்த நிலையிலும், சிறுமியை காப்பாற்ற முடியாமல் போயுள்ளது. இந்த நிலையில் சிறுமிக்கு நன்கு அறிமுகமான 33 வயது பெண் ஒருவரை சந்தேகத்தின் அடிப்படையில் பொலிசார் கைது செய்துள்ளனர்.

சிறுமி Shay Kang குடியிருப்புக்கு அருகாமையில் உள்ள பிரிக்ஹவுஸ் ஆரம்ப பள்ளியில் பயின்று வந்துள்ளார். இன்று சிறுமியின் புகைப்படத்தை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.

மேலும், சிறுமிக்கு என்ன நேர்ந்தது என்பது தொடர்பில் விரிவான விசாரணை முன்னெடுக்கப்படும் என்று பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுமி தொடர்பில் அப்பகுதி மக்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Share
தொடர்புடையது
1732374016 images 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை: மலைப்பகுதி மக்கள் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தல்!

நாட்டில் நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக, கண்டி, நுவரெலியா, பதுளை மற்றும் மாத்தளை ஆகிய...

24514649 rain
செய்திகள்விளையாட்டு

இலங்கை – பாகிஸ்தான் டி20 ரத்து செய்யப்பட்ட போட்டியின் நுழைவுச்சீட்டுகள் நாளை செல்லுபடியாகும்!

மழை காரணமாக ரத்து செய்யப்பட்ட இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டிக்காக...

AP01 10 2026 000005B
செய்திகள்உலகம்

என்னை விட நோபல் பரிசுக்குத் தகுதியானவர் எவருமில்லை: இந்தியா – பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக டொனால்ட் ட்ரம்ப் பெருமிதம்!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான பாரிய போர் அபாயத்தைத் தான் தடுத்து நிறுத்தியதாகவும், அதன் அடிப்படையில்...

06 1
செய்திகள்அரசியல்இலங்கை

2026-ஆம் ஆண்டு இலங்கையின் பாரிய வீட்டு நிர்மாண ஆண்டு: ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க பிரகடனம்!

அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மற்றும் வறிய மக்களுக்காக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் ‘Rebuilding Sri Lanka’ திட்டத்தின் கீழ்,...