9 2 scaled
உலகம்செய்திகள்

இளவரசி கேட் மீண்டும் பணிக்குத் திரும்புவது எப்போது? முதன்முறையாக வெளியான அறிவிப்பு

Share

இளவரசி கேட் மீண்டும் பணிக்குத் திரும்புவது எப்போது? முதன்முறையாக வெளியான அறிவிப்பு

பிரித்தானிய இளவரசி கேட் உடல் நலம் பாதிக்கப்பட்ட விடயம், பிரித்தானியாவில் அளவுக்கு மீறி கவனம் ஈர்த்துவிட்டது எனலாம்.

ஜனவரி மாதம், இளவரசி கேட் உடல் நலம் பாதிக்கப்பட்டு, அறுவை சிகிச்சைக்குப் பின் ஓய்வுக்காக வீடு திரும்பியதைத் தொடர்ந்து, அவரைக் குறித்து பெரிய அளவில் செய்திகள் எதுவும் வெளியாகவில்லை. ஆகவே, இளவரசிக்கு என்ன ஆனது என்பதை அறிந்து கொள்ளும் பொதுமக்கள் மற்றும் ஊடகங்களின் ஆர்வம், வதந்திகள் பரவக் காரணமாக அமைந்துவிட்டது.

இளவரசி கேட் கோமாவில் இருக்கிறார், இளவரசியும் இளவரசர் வில்லியமும் விவாகரத்து செய்ய இருக்கிறார்கள் என்றெல்லாம் செய்திகள் பரவத் துவங்கின. ஏற்கனவே மன்னர் உடல் நலம் பாதிக்கபட்டதால் அதிக வேலைப்பளுவைச் சுமந்துகொண்டிருக்கும் இளவரசர் வில்லியமுக்கு இந்த செய்திகள் கூடுதல் பாரமாக அமைந்தன.

இந்நிலையில், இளவரசி கேட் பணிக்குத் திரும்புவது குறித்து முதன்முறையாக பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஜூன் மாதம் 8ஆம் திகதி நடைபெற உள்ள Trooping of the Colour என்னும் நிகழ்ச்சிக்காக, குதிரை வீரர்கள் பங்கேற்கும் உடை ஒத்திகை நிகழ்ச்சியை இளவரசி கேட் பார்வையிட உள்ளதாக பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இளவரசி கேட் நன்றாக இருக்கிறார், அவரது உடல் நலத்தில் முன்னேற்றம் காணப்படுகிறது என்று மட்டுமே அரண்மனை வட்டாரம் அறிவித்திருந்த நிலையில், முதன்முறையாக, இளவரசி பங்கேற்க இருக்கும் நிகழ்ச்சி தொடர்பில் இப்படி ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

என்றாலும், இப்போதும் பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம்தான் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதேயொழிய, கென்சிங்டன் அரண்மனை வட்டாரம் இதுவரை அந்த செய்தியை உறுதி செய்யவில்லை.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 19 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வங்கக்கடலில் குறைந்த அழுத்தப் பிரதேசம் நீடிப்பு: மீனவர்களுக்கு ஆம்பர் எச்சரிக்கை! – வளிமண்டலவியல் திணைக்களம்!

இலங்கைக்குத் தென்கிழக்காக, தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் நிலவிய குறைந்த அழுத்தப் பிரதேசம் (Low Pressure...

image 1200x800 18 2
விளையாட்டுசெய்திகள்

இலங்கை அணிக்கு பேரிடி! – மதீஷ பத்திரண உலகக்கோப்பையிலிருந்து விலகல்; மதுசங்கவுக்கு ஐசிசி அனுமதி!

ஐசிசி டி20 உலகக்கோப்பை 2026 தொடரில் விளையாடி வரும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து...

image 1200x800 17 3
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அக்குரேகொட இரட்டைக் கொலை: கைதான சகோதரர்களுக்கு மார்ச் 4 வரை விளக்கமறியல்! – டுபாயிலிருந்து இயங்கிய மாபியா அம்பலம்!

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரையும் அவரது மனைவியையும் சுட்டுக்கொலை செய்த சம்பவத்திற்கு உதவி ஒத்தாசை வழங்கிய...

image 1200x800 20 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹம்பாந்தோட்டையில் இரு பேருந்துகள் பயங்கர மோதல்! – வெளிநாட்டினர் உட்பட 20 பேர் காயம்; கடைகள் சேதம்!

ஹம்பாந்தோட்டை பல்லேமளல பகுதியில் இன்று (18) நண்பகல் இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்தும், தனியார் பேருந்தும்...