tamilnih 35 scaled
உலகம்செய்திகள்

உலகப் போர் தொடர்பில் ட்ரம்ப் ஆருடம்

Share

உலகப் போர் தொடர்பில் ட்ரம்ப் ஆருடம்

அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் மீண்டும் தெரிவு செய்யப்பட்டால், அவரது தலைமையில் மூன்றாம் உலகப் போரில் அமெரிக்கா தோற்பது உறுதி என்று டொனால்டு ட்ரம்ப் தமது ஆதரவாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

ட்ரம்புக்கு அளிக்கும் ஒரு வாக்கு என்பது உங்கள் சுதந்திரத்திற்கான நுழைவுச்சீட்டு என குறிப்பிட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், மிக மோசமான சூழலில் நாம் வாழ்கிறோம் என்றார்.

எதிர்வரும் தேர்தலில் ஜோ பைடன் வென்றால், மூன்றாம் உலகப் போரில் அமெரிக்கா தோற்பது உறுதி என்றார். ஜோ பைடன் ஆட்சி என்பது குற்றச்செயல்கள் மலிந்து, ரணகளமாக இருக்கும் என்று 4 ஆண்டுகளுக்கு முன்னரே தாம் குறிப்பிட்டிருந்ததாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஜோ பைடன் வென்றால் அமெரிக்க மக்களுக்கு மிக மோசமான நாட்களாகவே இருக்கப் போகிறது. நவம்பர் 5 நமக்கு புதிய விடுதலை நாளாக இருக்கும் என குறிப்பிட்டுள்ள ட்ரம்ப், பொய்யர்களுக்கும், ஏமாற்றுக்காரர்களுக்கும், அது அவர்களின் இறுதித் தீர்ப்பு நாளாக இருக்கும் என்றார்.

ட்ரம்பை நீங்கள் ஜனாதிபதியாக வெள்ளைமாளிகைக்கு அனுப்புங்கள், அவர் உலகின் அனைத்தையும் பார்த்துக் கொள்வார் என்று ஹங்கேரியின் விவாதத்துக்குரிய பிரதமர் viktor orbán குறிப்பிட்டிருந்ததை ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமெரிக்காவில் அதிகரிக்கும் குற்றச்செயல்களை தம்மால் ஒரே நாளில் கட்டுக்குள் கொண்டுவர முடியும் என குறிப்பிட்டுள்ள ட்ரம்ப், பொலிசாருக்கு முழு அதிகாரம் அளித்தால் போதும் என்றார்.

Share
தொடர்புடையது
4
இந்தியாசெய்திகள்

கரூரில் 41 பேர் மரணம்.. 34 மணி நேரத்துக்கு பின் வீட்டை விட்டு வெளியே வந்த விஜய்..எங்கு செல்கிறார்?

கடந்த சனிக்கிழமை கரூரில் தவெக பிரச்சாரம் நடந்த இடத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதன் காரணமாக பலரும்...

3
இந்தியாசெய்திகள்

அரசியல் பயணத்தில் விஜய் அப்படி செய்தது வருத்தமளிக்கிறது… பிரபல நடிகை

கடந்த சில நாட்களுக்கு முன் தமிழகத்தில் நடந்த ஒரு விஷயம் பரபரப்பின் உச்சமாக இன்னும் பேசப்படுகிறது....

2
இந்தியாசெய்திகள்

விஜய்க்கு ஆதரவாக பதிவிட்ட நண்பர் சஞ்சீவ்! வைரல் பதிவு

கரூரில் விஜய்யின் அரசியல் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்று கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 41 ஆக...

25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...