உலகம்செய்திகள்

களைகட்ட தொடங்கியது அம்பானி வீட்டு திருமணம்! வெளியானது Pre-Wedding புகைப்படங்கள்

Share
5 2 scaled
Share

களைகட்ட தொடங்கியது அம்பானி வீட்டு திருமணம்! வெளியானது Pre-Wedding புகைப்படங்கள்

முகேஷ் அம்பானி மகன் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ள நிலையில், திருமணத்திற்கு முந்தைய விழாவின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

Reliance Industries Ltd தலைவரும், நிர்வாக இயக்குனருமான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் வீரேன் மெர்ச்சண்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

1995 -ம் ஆண்டு பிறந்த ஆனந்த் அம்பானி Reliance Industries Ltd -ன் எரிசக்தி வணிகத்தை வழிநடத்தி வருகிறார். மேலும், தாயார் நீடா அம்பானியுடன் சேர்ந்து மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் அணியையும் வழிநடத்துவதோடு, ஜியோ இயக்குநராகவும் 2 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.

1994 -ம் ஆண்டு பிறந்த ராதிகா மெர்ச்சன்ட் தந்தையின் மருந்து நிறுவனமான Encore Healthcare நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றுகிறார்.

கடந்த 2022 -ம் ஆண்டு டிசம்பரில் ராஜஸ்தானின் நாத்வாராவில் உள்ள ஸ்ரீநாத்ஜி கோயிலில் ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சன்ட் இடையே ரோகா நிகழ்வு நடைபெற்றது. பின்னர், இவர்களுக்கு 2023 -ம் ஆண்டு ஜனவரியில் மும்பையில் உள்ள அன்டாலியா இல்லத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இந்நிலையில், நேற்று இந்திய மாநிலமான குஜராத்தில் உள்ள ஜாம்நகரில் இருக்கும் அம்பானி பண்ணை வீட்டில் ‘லகன் லக்வான்’ என்ற விழா நடைபெற்றது. இந்த விழாவானது, ஆசீர்வாதத்தை பெறும் அடையாளமாக ‘கன்கோத்ரி’ என்று அழைக்கப்படுகிறது.

இந்த விழாவில் உள்ள புகைப்படங்களை மணப்பெண் ராதிகா மெர்ச்சன்ட் பகிர்ந்துள்ளார். தற்போது, இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதில் பலரும் அம்பானி வீட்டின் pre-wedding ஷூட் ஆரம்பித்துவிட்டு என்று கூறுகின்றனர்.

Share
Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...