உலகம்
காசா எல்லையில் எகிப்தின் புதிய சுவர்., செயற்கைக்கோள் படங்கள் அம்பலம்
காசா எல்லையில் எகிப்தின் புதிய சுவர்., செயற்கைக்கோள் படங்கள் அம்பலம்
ரஃபா நகரில் இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்த தயாராகி வருவதால் எகிப்து உஷார் நிலையில் உள்ளது.
தெற்கு காசா எல்லையில் பாரிய சுவர் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. செயற்கைக்கோள் படங்கள் மூலம் இது தெரியவந்துள்ளது.
காஸாவின் மக்கள்தொகையில் பாதி பேர் தற்போது ரஃபாவில் பதுங்கி உள்ளனர்.
சுவர் கட்டுவதை பகிரங்கமாக அறிவிக்காத எகிப்து, பாலஸ்தீனியர்களை தனது எல்லைக்குள் கட்டாயப்படுத்த வேண்டாம் என இஸ்ரேலை கேட்டுக் கொண்டுள்ளது.
கடந்த ஒக்டோபர் 7-ஆம் திகதி இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதை அடுத்து இரு பிரிவினரிடையே போர் நீடித்து வருவது தெரிந்ததே.