tamilni 330 scaled
உலகம்செய்திகள்

Yes சொல்லிவிட்டார்! 60 வயதில் காதலியை கரம்பிடிக்கும் அவுஸ்திரேலிய பிரதமர்

Share

Yes சொல்லிவிட்டார்! 60 வயதில் காதலியை கரம்பிடிக்கும் அவுஸ்திரேலிய பிரதமர்

அவுஸ்திரேலிய பிரதமர் தனது காதலியை கரம்பிடிக்கவுள்ளதாக, சமூக வலைதளங்களில் அவர் வெளியிட்ட பதிவு வைரலாகி வருகிறது.

அவுஸ்திரேலியாவில் பிரதமராக இருப்பவர் அந்தோணி அல்பானீசு (Anthony Albanese). இவர், தனது காதலியான ஜோடீ ஹெய்டன் (Jodie Haydon) என்பவரை திருமணம் செய்யும் முடிவை வெளியிட்டுள்ளார்.

கடந்த 2020- ம் ஆண்டு தொடக்கத்தில் மெல்போர்ன் நகரில் விருந்து நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்த விருந்து நிகழ்ச்சியில் தான் முதன்முறையாக Jodie Haydon -யை Anthony Albanese சந்தித்தார்.

இதன்பின், 2022 -ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலின் போது Jodie Haydon மற்றும் Anthony Albanese இருவரும் ஒன்றாக இணைந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்தனர்.

இதனையடுத்து, Anthony Albanese பிரதமரான பின்னரும் துபாய், மேட்ரிட், பாரீஸ், லண்டன் மற்றும் டெல்லி ஆகிய இடங்களுக்கு செல்கையில், அவருடன் Jodie Haydon சென்றுள்ளார்.

அதுமட்டுமல்லாமல், இங்கிலாந்து நாட்டின் ராணி 2-ம் எலிசபெத்தின் மறைவுக்கும், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அளித்த விருந்து நிகழ்ச்சிக்கும் இருவரும் ஒன்றாக சென்று கலந்து கொண்டனர்.

இதனிடையே, பதவியில் இருக்கும் போது திருமண நிச்சயம் நடந்த முதல் பிரதமர் Anthony Albanese என்று அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், Anthony Albanese தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், “அவள் ஆம் என்று சொல்லிவிட்டார்” என்று கூறி அவருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அல்பானீசுக்கு முதல் திருமணத்தின் வழியே நாதன் அல்பானீசு என்ற மகன் ஒருவர் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Share
தொடர்புடையது
13 11
உலகம்செய்திகள்

போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு பின்னர் காஷ்மீரில் தாக்குதல்.. பாகிஸ்தான் மறுப்பு தெரிவிப்பு

இந்தியாவுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறியதாக இந்தியா கூறியதை பாகிஸ்தான் அரசாங்கத்தின் உயர் அதிகாரி...

15 11
இலங்கைசெய்திகள்

வாக்களிப்பதைத் தவிர்த்து கொழும்பில் தங்கியிருந்த 10 லட்சம் வாக்காளர்கள்

கடந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலின் போது வேறுபிரதேசங்களைச் சேர்ந்த சுமார் பத்து லட்சம் வாக்காளர்கள், வாக்களிப்பதைத்...

16 11
இலங்கைசெய்திகள்

இலங்கையை உலுக்கிய பயங்கர விபத்து – பலி எண்ணிக்கை 21ஆக அதிகரிப்பு

றம்பொட பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21ஆக அதிகரித்துள்ளதாக போக்குவரத்து பிரதியமைச்சர் ஊடகம்...

14 11
இலங்கைசெய்திகள்

மின்சாரக் கட்டணம் அதிகரிப்பு தொடர்பில் மின்சார சபையின் அறிவிப்பு

மின்சார கட்டணங்களை உயர்த்துவதற்கான முன்மொழிவை இலங்கை மின்சார சபை அடுத்த வாரம் பொதுப் பயன்பாட்டு ஆணையத்திடம்...