tamilni 234 scaled
உலகம்செய்திகள்

திடீரென வீட்டிற்குள் நுழைந்து பயங்கரமாக தாக்கிய நபர்! ஒருவர் பலி, மூவர் கவலைக்கிடம்

Share

திடீரென வீட்டிற்குள் நுழைந்து பயங்கரமாக தாக்கிய நபர்! ஒருவர் பலி, மூவர் கவலைக்கிடம்

தமிழக மாவட்டம் திருவள்ளூரில் மர்ம நபர் ஒருவர் வீட்டுக்குள் புகுந்து தாக்கியதில் ஒருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்த திருமுல்லைவாயலைச் சேர்ந்தவர் மாதவன் (55). மண்டபம் ஒன்றின் உரிமையாளரான இவர், தனது குடும்பத்துடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில், மாதவனின் வீட்டுக்குள் மர்ம நபர் ஒருவர் பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்து, அங்கிருந்தவர்களை கடுமையாக தாக்கியுள்ளார்.

எதிர்பாராத தாக்குதலால் மாதவனின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். மேலும் மாதவன் தனது மனைவி, மகள் மற்றும் மாமியார் மீது தாக்குதல் நடந்ததைத் தடுத்துள்ளார்.

அப்போது அவருக்கு முகம், கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான தாக்குதல் ஏற்பட்டதால் மாதவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனையடுத்து தாக்குதல்தாரி தப்பியோடிய நிலையில், அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் தாக்கப்பட்ட மாதவனின் குடும்பத்தினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அங்கு சிகிச்சை பெற்று வரும் மூவரில் 2 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் மாதவனின் உடலைக் கைப்பற்றிய பொலிஸார், இந்த தாக்குதல் சம்பவத்திற்கான காரணம் மற்றும் தாக்குதல்தாரியை தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...